2026க்குள் ஐந்து மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்
டிசம்பர் 2024 இல் தொடங்கி அக்டோபர் 2026க்குள் ஐந்து எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் நிறுவனம் ரூ.10,000 கோடியை மின்சார துறையில் முதலீடு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் வரவிருக்கும் அனைத்து மின்சார எஸ்யூவி கார்களும் பிராண்டின் INGLO ஸ்கேட்போர்டு இயங்குதளத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி பேக்குகள் (60-80kWh) மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் (175kW) ஆகியவை இருக்கும். இதற்கிடையே, மஹிந்திரா நிறுவனம் வோக்ஸ்வாகனுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், INGLO இயங்குதளம் வோக்ஸ்வாகனின் பாகங்களை மஹிந்திரா கார்களுடன் இணைக்கும் பணியை செய்யும்.
மஹிந்திராவின் மின்சார எஸ்யூவிகளைப் பற்றிய ஒரு விரைவான பார்வை
மஹிந்திராவின் முதல் மின்சார எஸ்யூவி காரண XUV.e8 டிசம்பர் 2024 இல் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து XUV.e9 ஏப்ரல் 2025 இல், BE.05 மற்றும் BE Rall-E அக்டோபர் 2025 இல், மற்றும் BE.07 அக்டோபர் 2026 இல் வெளியிடப்படும். XUV.e8 மஹிந்திரா XUV700 அடிப்படையிலானது மற்றும் 230எச்பி மற்றும் 350எச்பி வேரியண்டில் உற்பத்தி செய்யும் இரட்டை-எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட 80kWh பேட்டரியைக் கொண்டிருக்கும். BE.07 ஹூண்டாய் CRETA மற்றும் XUV700 மாடல்களை ஒத்திருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜெர்மன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமான வோக்ஸ்வாகனுடனான கூட்டு, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கோலோச்சும் மஹிந்திராவின் மின்சார கார் தயாரிப்பில், குறிப்பிடத்தக்க அளவிலான செலவு கட்டுப்பாட்டுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.