ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதராக தீபிகா படுகோன் ஒப்பந்தம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) தனது பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கூட்டாண்மை புதுமையான ஆட்டோமொபைல்களை, மாறும், முன்னோக்கிச் சிந்திக்கும் பார்வையாளர்களின் அபிலாஷைகளுடன் இணைக்கும் என நம்பப்படுகிறது. HMIL இன் COO, தருண் கார்க், "இந்தியாவின் திறமையான, உலகளாவிய இந்திய அடையாளமான தீபிகா படுகோன், எங்கள் பிராண்ட் தூதராக வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் ஹூண்டாய்க்கான தூதராக இதுநாள் வரை ப்ராண்ட் அம்பாஸடராக இருக்கும் ஷாருக்கானுடன் படுகோன் இணைகிறார்.
உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் தீபிகாவும் ஒருவர்
உலகளவில் டைம் இதழின் முதல் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் தீபிகா படுகோன்-உம் பட்டியலிடப்பட்டார். இது அவரது கவர்ச்சியையும் உலகளாவிய ஈர்ப்பையும் ஹூண்டாய்க்கு தரும் என அந்நிறுவனம் கூறுகிறது. தனது அறிக்கையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தீபிகா படுகோன்,"காலத்தின் சோதனையில் நிற்காமல், செயல்திறனுக்கான அளவுகோல்களை நிர்ணயித்த வாகனங்களை வடிவமைப்பதில் வளமான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது ஒரு மரியாதை."