ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு!
எழுதியவர்
Siranjeevi
Mar 31, 2023
02:30 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும். இதனடிப்படையில், இந்த ஆண்டிலும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டணம் 5 ரூபாய் முதல் 55ரூபாய் வரை உயர உள்ளது. இதில் காருக்கு 60 ரூபாயில் இருந்து 70 ரூபாய் ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு 105 ரூபாயில் இருந்து 115 ரூபாய் ஆகவும், லாரிக்கு 240ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்