டிஸ்க் பிரேக் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் வரும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் 2025 மாடல்
செய்தி முன்னோட்டம்
ஹீரோ மோட்டோகார்ப் அதன் மிகவும் பிரபலமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பை அதன் வரவிருக்கும் 2025 மாடலில் மேம்படுத்த உள்ளது.
இந்த இரு சக்கர வாகனத்தின் படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், புதிய மாடலில் டிஸ்க் பிரேக் இடம்பெறும் என்பது தெரிய வந்துள்ளது.
இது தற்போதைய 130 மிமீ முன் மற்றும் பின்புற டிரம் பிரேக் அமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் குறிக்கிறது.
இருப்பினும், பைக்கின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஒரு டியூபுலர் டபுள் கிரேடில் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்ஷார்பர்களையும் பின்புறத்தில் ஐந்து-படி சரிசெய்யக்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்ஷார்பரையும் கொண்டுள்ளது.
என்ஜின்
என்ஜின் மற்றும் செயல்திறன்
இந்த புதிய அப்டேட்டில் பழைய இரு சக்கர வாகனத்தில் இருந்த அதே 97.2 சிசி ஏர்-கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இது 8,000 ஆர்பிஎம்மில் 7.9 ஹெச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்மில் 8.05 நிமீ டார்க்கை உற்பத்தி செய்கிறது.
எனினும், 2025 மாடலில் OBD-2B இணக்கத் தரங்களை பூர்த்தி செய்ய என்ஜின் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிகிறது.
கூடுதலாக, ஹீரோ மோட்டோகார்ப் அதன் ஏற்கனவே விரிவான சில்வர் நெக்ஸஸ் ப்ளூ, பிளாக் வித் சில்வர், மேட் ஷீல்ட் கோல்ட் மற்றும் ஃபயர்ஃபிளை கோல்டன் ஆகிய பல்வேறு வண்ணங்களில் கொடுக்கிறது.
தற்போது, ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ரூ.77,176 முதல் ரூ.79,926 (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.