NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
    உலகம்

    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO

    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023, 01:22 pm 1 நிமிட வாசிப்பு
    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
    இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்க WHO அழைப்பு

    2022ஆம் ஆண்டில் இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு(WHO) குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருந்த நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்த ஐநா சுகாதார நிறுவனம் மூன்று உலகளாவிய மருத்துவ எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு எதிராக "உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை" வலியுறுத்தியுள்ளது. நேற்று(ஜன 23) WHO ஒரு அறிக்கையில், காம்பியா, இந்தோனேஷியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்(முக்கியமாக 5 வயதுக்குட்பட்டவர்கள்) கடுமையான சிறுநீரகக் பாதிப்பால் உயிரிழந்தனர். இதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளே காரணம் என்று தெரிவித்திருக்கிறது.

    194 உலக நாடுகளுக்கு அழைப்பு

    இந்த மருந்துகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ், திமோர் லெஸ்டே, செனகல் மற்றும் கம்போடியாவில் இந்த மருந்துகள் தற்போதும் விற்பனையில் இருப்பதால், அந்த நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் WHO கூறியுள்ளது. மேலும், இதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க அதன் உறுப்பினர்களான 194 நாடுகளில் நடவடிக்கை எடுக்க அந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. "இது தனிப்பட்ட ஒரு பிரச்சனை அல்ல என்பதால், மருத்துவ விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு முக்கிய நாடுகளை உடனடி நடவடிக்கை எடுக்குமாறு WHO அழைப்பு விடுக்கிறது" என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதற்காக 3 எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ள WHO, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023