NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
    அடுத்த செய்திக் கட்டுரை
    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
    இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்க WHO அழைப்பு

    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO

    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    2022ஆம் ஆண்டில் இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு(WHO) குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருந்த நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

    மேலும், இந்த ஐநா சுகாதார நிறுவனம் மூன்று உலகளாவிய மருத்துவ எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு எதிராக "உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை" வலியுறுத்தியுள்ளது.

    நேற்று(ஜன 23) WHO ஒரு அறிக்கையில், காம்பியா, இந்தோனேஷியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்(முக்கியமாக 5 வயதுக்குட்பட்டவர்கள்) கடுமையான சிறுநீரகக் பாதிப்பால் உயிரிழந்தனர். இதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளே காரணம் என்று தெரிவித்திருக்கிறது.

    WHO

    194 உலக நாடுகளுக்கு அழைப்பு

    இந்த மருந்துகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பிலிப்பைன்ஸ், திமோர் லெஸ்டே, செனகல் மற்றும் கம்போடியாவில் இந்த மருந்துகள் தற்போதும் விற்பனையில் இருப்பதால், அந்த நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் WHO கூறியுள்ளது.

    மேலும், இதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க அதன் உறுப்பினர்களான 194 நாடுகளில் நடவடிக்கை எடுக்க அந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    "இது தனிப்பட்ட ஒரு பிரச்சனை அல்ல என்பதால், மருத்துவ விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு முக்கிய நாடுகளை உடனடி நடவடிக்கை எடுக்குமாறு WHO அழைப்பு விடுக்கிறது" என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    இதற்காக 3 எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ள WHO, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    உலக செய்திகள்

    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் சீனா
    தாய்லாந்து இளவரசி மஹிடோல் உடல்நிலை குறித்து அரண்மனை அறிக்கை வெளியீடு உலகம்
    முன்னாள் காதலனின் இறுதி சடங்கிற்கு மேக்-அப் போட்டு கிளம்பி சென்ற 92 வயது மூதாட்டி வைரல் செய்தி

    உலகம்

    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உலக செய்திகள்
    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்? ஓடிடி
    இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை இங்கிலாந்து
    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025