NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம்
    நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்திய காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

    கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 20, 2025
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவின் வான்கூவரில் உள்ள ஒரு முக்கிய குருத்வாரா, காலிஸ்தான் ஆதரவு வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது. இது சீக்கிய சமூகத்தினரிடையே கவலைகளைத் தூண்டியது.

    இந்த சம்பவம் ராஸ் தெருவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்சா திவான் சொசைட்டி (கேடிஎஸ்) குருத்வாராவில் இரவு நடந்துள்ளது.

    மேலும் அருகிலுள்ள சர்ரேயில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய வைசாகி அணிவகுப்பின்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    குருத்வாரா நிர்வாகத்தால் பகிரப்பட்ட புகைப்படங்களில் கோயிலின் சுற்றுச்சுவரில் காலிஸ்தான் என்ற வார்த்தை பல முறை ஸ்ப்ரே-பெயின்ட் செய்யப்பட்டிருப்பதைக் காட்டியது.

    சனிக்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலை நடந்த இந்த சம்பவம் குறித்து வான்கூவர் காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    வேதனை

    கல்சா திவான் சொசைட்டி வேதனையுடன் அறிக்கை வெளியீடு

    ஒரு அறிக்கையில், கல்சா திவான் சொசைட்டி இந்தச் செயலைக் கண்டித்து, இது சமூகத்திற்கு வேதனைகரமான தருணம் என்று விவரித்தது.

    சீக்கிய பிரிவினைவாதிகளின் ஒரு சிறிய குழு கோயிலின் புனித சுவர்களை காலிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களுடன் சிதைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    கனடிய சீக்கிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் பிரிவினையை உருவாக்கவும் தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நாசவேலைச் செயல் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரோஸ் ஸ்ட்ரீட் குருத்வாரா கனடாவின் பழமையான சீக்கிய குருத்வாராக்களில் ஒன்றாகும்.

    மேலும் இது நீண்ட காலமாக சமூக ஒற்றுமை மற்றும் மீள்தன்மையின் அடையாளமாக செயல்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சர்வதேச குடும்ப தினம் 2025: குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் தினத்தின் வரலாறு மற்றும் பின்னணி சிறப்பு செய்தி
    துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது சுற்றுலா
    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    கனடா

    டிக்டாக்கிற்கு தடை விதித்தது கனடா அரசு; ஆனால் ஒரு ட்விஸ்ட் டிக்டாக்
    பாதுகாப்பு தர முடியாது என மறுக்கும் கனடா: இந்தியாவின் தூதரக நடவடிக்கைகள் பாதிப்பு இந்தியா
    10 வருட டூரிஸ்ட் விசாக்களை நிறுத்திய கனடா; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்  விசா
    ஜெய்சங்கர் பேசியதை ஒளிபரப்பிய ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு தடை விதித்த கனடா; பதிலடி தந்த ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா இந்தியா
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி அமெரிக்கா
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் அமெரிக்கா

    உலகம்

    வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு அமெரிக்கா
    விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து உக்ரைன்
    இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி இஸ்ரேல்
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுதலை செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    உலக செய்திகள்

    சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம் நிலநடுக்கம்
    தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு இந்தியர்கள்
    மியான்மரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,000க்கும் மேல் உயர்வு நிலநடுக்கம்
    மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு நிலநடுக்கம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025