NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே?
    அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்!(படம்: NWS Key West)

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் 'பாம்ப் சூறாவளி' என்ற பனிப்புயல் நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

    தற்போதைய வெப்பநிலை சுமார் -48 டிகிரி செல்சியஸ் இருப்பதால், வெந்நீர் வைத்தால் கூட அது விரைவில் உறைந்து விடுகிறதாம்.

    பொதுவாக, இந்த கால கட்டங்களில் தெற்கு அமெரிக்கா இயல்பான வெப்பநிலையில் தான் இருக்கும். வட அமெரிக்காவில் மட்டுமே பனி பொழிவு ஏற்படும்.

    ஆனால், இந்த வருடம் நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இதையடுத்து, 5000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7600 விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளது.

    இதனால், அமெரிக்க நாட்டின் பல இடங்களில் விபத்துகளும் மனித இழப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    24 Dec 2022

    மின்சாரம் இல்லாமல் வீட்டுக்குள் பதுங்கும் மக்கள்!

    கடும் காற்றாலும் பனி பொழிவாலும் மின் கம்பங்கள் பல இடங்களில் உடைந்து விழுந்ததால் மின்சாரம் இல்லாமல் பலர் சிரமப்படுகின்றனர்.

    பொதுவாக, கடும் குளிரை சமாளிக்க அறைகளை இதமாக்கும் ரூம் வாமர்களை இது போன்ற நாடுகளில் வைத்திருப்பார்கள்.

    ரூம் வாமர்கள், வாட்டர் ஹீட்டர்கள் போன்ற சாதனங்கள் இல்லையென்றால் குளிரிலேயே உறைந்துவிடும் நிலைக் கூட வரலாம்.

    அப்படி இருக்கையில், வாஷிங்டனில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    ஓஹியோ என்ற மாகாணத்தில் சுமார் 5,50,000 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின்சாரம் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

    மேலும், மெக்ஸிகோவில் இருந்து புலப்பெயர்ந்தவர்கள் பலர் செல்வதற்கு இடம் இல்லாமல் ரோடுகளிலும் பொது கட்டிடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025