NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைதி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை; ராணுவத்தை இறக்கிய அதிபர் டிரம்ப்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைதி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை; ராணுவத்தை இறக்கிய அதிபர் டிரம்ப்
    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைதி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைதி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை; ராணுவத்தை இறக்கிய அதிபர் டிரம்ப்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 09, 2025
    09:33 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் கலவரத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை எச்சரித்தார்.

    அவர்கள் போலீஸ் அதிகாரிகள் அல்லது வீரர்கள் மீது மரியாதைக்குறைவாக நடந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    குடியேற்ற சோதனைகள் தொடர்பான எதிர்ப்பு போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 2000 தேசிய காவல்படை துருப்புக்களை நகரத்திற்கு அவர் அனுப்பியதுடன், இத்தகைய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் தொடங்கின.

    மோதல்

    போராட்டக்காரர்கள் துருப்புக்களுடன் மோதல்

    லாஸ் ஏஞ்சல்ஸில், மரியாச்சி பிளாசாவிலிருந்து LA நகர மையத்தில் உள்ள ஒரு கூட்டாட்சி குடியேற்ற தடுப்பு மையத்திற்கு அமைதி பேரணியாக தொடங்கிய ஊர்வலம், திடீரென குழப்பமாக மாறியது. போராட்டக்காரர்கள் "LA இலிருந்து ICE வெளியேறு" போன்ற கோஷங்களை எழுப்பினர்.

    மறுபுறம், தேசிய காவல்படை துருப்புக்கள் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் கண்ணீர் புகை குண்டுகளையும் மிளகு பந்துகளையும் போராட்டக்காரர்கள் மீது வீசியதால் நிலைமை மோசமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சம்பவ இடத்திலிருந்து வந்த வீடியோக்களில் தெருக்களில் கண்ணீர் புகை மேகங்கள் நிரம்பி வழிவதைக் காட்டியது.

    உத்தரவிடப்பட்டபோதும் அந்தப் பகுதியை விட்டு வெளியேறாததற்காக சனிக்கிழமை 27 பேரை கைது செய்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.

    கிளர்ச்சி

    வெள்ளை மாளிகை அவர்களை 'கிளர்ச்சியாளர்கள்' என கருதுகிறது

    அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் போராட்டக்காரர்களை "கிளர்ச்சியாளர்கள்" என்றும், வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளர் ஸ்டீபன் மில்லர் போராட்டங்களை "வன்முறை கிளர்ச்சி" என்றும் விவரித்தார்.

    இருப்பினும், டிரம்ப் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை -இது ஜனாதிபதி உள்நாட்டு அமைதியின்மையைக் கையாள அமெரிக்க இராணுவத்தை அனுப்ப அனுமதிக்கும் சட்டமாகும்.

    அதைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டபோது, ​​டிரம்ப், "அது ஒரு கிளர்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்தது. என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.

    எனினும், வன்முறை தொடர்ந்தால், பணியில் உள்ள துருப்புக்கள் அனுப்பப்படலாம் என்று பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்தார்.

    "பெண்டில்டன் முகாமில் உள்ள கடற்படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்," என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லாஸ் ஏஞ்சல்ஸ்
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைதி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை; ராணுவத்தை இறக்கிய அதிபர் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்
    மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்! மேகாலயா
    நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னரை தோற்கடித்து, பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் கார்லோஸ் அல்கராஸ் கார்லோஸ் அல்கராஸ்
    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்

    லாஸ் ஏஞ்சல்ஸ்

    LA காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு, 12,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிவு காட்டுத்தீ
    லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் 2025 ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிப்பை ஒருவாரம் தாமதமாக வெளியிட முடிவு ஆஸ்கார் விருது
    லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு காட்டுத்தீ
    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் இதுதான்; உறுதிப்படுத்தியது ஐசிசி ஒலிம்பிக்

    அமெரிக்கா

    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் இந்தியா
    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமேசான்

    டொனால்ட் டிரம்ப்

    இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு இந்தியா
    கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப் அமெரிக்கா
    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025