Loading...
ஈரான் மீதான தாக்குதல் திடீர் நிறுத்தம்! அமெரிக்காவுக்கு ஏவுகணை தட்டுப்பாடா?
ஈரான் மீதான தாக்குதல்களை 13 நாட்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் திடீர் நிறுத்தம்! அமெரிக்காவுக்கு ஏவுகணை தட்டுப்பாடா?

எழுதியவர் Vasuki
Jul 26, 2026
04:33 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீதான தொடர் 13 நாள் வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகளிடம் ஏவுகணைகளின் இருப்பு கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய சூழல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ராஜதந்திர பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள சூழலில், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தாக்குதல் நிறுத்தப்பட்டதன் பின்னணி

பேட்ரியாட் ஏவுகணைகளின் கையிருப்பு குறைவு

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் 'பேட்ரியாட்' ரக ஏவுகணை எதிர்ப்பு யூனிட்களின் கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்கு சென்றுள்ளது.

கடந்த சில மாதங்களில் அமெரிக்கா 1,200-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது (ஒவ்வொரு ஏவுகணையின் மதிப்பும் $4 மில்லியனுக்கும் அதிகம்).

கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெயின், ஈரான் மீதான போரை மேலும் தீவிரப்படுத்தினால் அமெரிக்க மத்திய கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட ஏவுகணைகள் முற்றிலும் தீர்ந்துவிடும் எனவும், இது அமெரிக்க ராணுவத் தளங்களையும் நட்பு நாடுகளையும் ஈரானின் எதிர்த்தாக்குதலுக்குப் பலிகடா ஆக்கிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிராந்தியப் போராக மாறுமோ என்ற அச்சம்

தீவிரமடையும் ராஜதந்திர பேச்சுவார்த்தை

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஓமன் நாட்டின் தூதுக்குழு ஈரானின் தலை நகர் டெஹ்ரானுக்கு வருகை தந்துள்ளது.

இந்த சூழலில் தாக்குதலைத் தொடர்வது பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்பதால் 'ஆக்சியோஸ்' செய்தியின்படி, தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்துமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் மூத்த ஆலோசகர்கள், ஈரானுடன் போரைப் பெரிதாக்குவது ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் கட்டுப்பாடற்ற பெரும் போரை மூட்டிவிடும் என கவலை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ராணுவ நடவடிக்கைகள் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டதா?

டொனால்ட் டிரம்பின் தற்போதைய நிலைப்பாடு

டிரம்ப் பேசுகையில், "அமெரிக்கா எந்நேரமும் தயாராகவே உள்ளது. ஆனால், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே புத்திசாலித்தனமான உத்தியாக இருக்கும். நாங்கள் இப்போது அவர்களுடன் பேசி வருகிறோம்; நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஈரானுடன் உடனடியாக ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று தான் நம்பவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைக்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், அமெரிக்கா எப்போதும் ராஜதந்திர வழிகளையே விரும்புகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணையிலோ அல்லது அமெரிக்க நட்பு நாடுகள் மீதோ ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT