LOADING...
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்; 'சும்மா லேசா தட்டினோம்' என்கிறார் டிரம்ப்
ஈரானிய ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்; 'சும்மா லேசா தட்டினோம்' என்கிறார் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2026
07:27 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க மத்திய கமாண்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, முக்கிய நீர்வழியாகக் கருதப்படும் ஹார்முஸ் பகுதியில் பயணிக்கும் போர்க்கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானிய ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன. எனினும், இந்தத் தாக்குதலில் ஈரானின் நிலப்பகுதிகளும், ஹார்முஸ் பகுதிக்குள் நுழைந்த இரு கப்பல்களும் இலக்கு வைக்கப்பட்டதாக ஈரான் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த மோதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய தாக்குதல் படையினர் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "ஈரான் விரைவில் அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்காவிட்டால், இதைவிடக் கடுமையான மற்றும் வன்முறையான பதிலடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்த அவர், இந்தத் தாக்குதலை ஒரு சிறிய 'அன்பான தட்டல்' என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அமைதி ஒப்பந்தம்

முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தம்

மறுபுறம், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூன்று கட்ட அமைதித் திட்டத்தை வாஷிங்டன் ஈரானுக்கு வழங்கியுள்ளது. இதில் 30 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலம் மற்றும் நீரிணையில் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து போன்ற முக்கிய விவகாரங்களில் இந்தத் திட்டம் மௌனம் காப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரானின் வெளியுறவுத்துறை இன்னும் இறுதி முடிவை அறிவிக்காததால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் நீடிக்கிறது.

Advertisement