NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
    இந்திய-அமெரிக்க கூட்டு அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மில்லர் இதை கூறி இருக்கிறார்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 27, 2023
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    LeT, JuD போன்ற பயங்கரவாத குழுக்களையும், அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளையும் நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அமெரிக்கா தொடர்ந்து இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும். பரஸ்பர பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்" என்று கூறியுள்ளார்.

    "லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்களையும் நிரந்தரமாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    ஜனங்க

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கடுமையாக கண்டித்த தலைவர்கள் 

    பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டு அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மில்லர் இதை கூறி இருக்கிறார்.

    இந்த கூட்டறிக்கையில், அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ்/டேஷ், லஷ்கர் இ-தய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM), மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட ஐ.நா-வில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக பாகிஸ்தான் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் வலியுறுத்தி இருந்தனர்.

    மேலும், இரு தலைவர்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களைப் பயன்படுத்துவதை கடுமையாகக் கண்டித்தனர்.

    இந்த அறிக்கைக்கு பதிலளித்திருந்த பாகிஸ்தான், இது ஒரு தரப்புக்கு மட்டும் சார்பாக இருக்கிறது என்றும், இது தவறாக வழி நடத்தும் கருத்து என்றும் கூறியிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா

    இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம் அமெரிக்கா
    சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும்  சர்வதேச யோகா தினம்
    ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA ஓய்வூதியம்
    இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு கொரோனா

    பாகிஸ்தான்

    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான் கான்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் இந்தியா

    அமெரிக்கா

    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  சீனா
    பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்! தொழில்நுட்பம்
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் ரஷ்யா
    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்

    உலகம்

    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலக செய்திகள்
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்  மும்பை
    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு  இந்தோனேசியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025