NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 
    வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிந்த வருகின்றனர்.

    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023
    05:51 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத ஒரு பெரிய வெடிகுண்டு, தென்மேற்கு போலந்தில் உள்ள வ்ரோக்லா நகரின் ரயில்வே மேம்பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதால், 2,500 குடியிருப்பாளர்கள் இன்று(மே 26) வெளியேற்றப்பட்டனர்.

    250 கிலோகிராம் எடையுள்ள இந்த வெடிகுண்டு, போலந்து நகரமான வ்ரோக்லாவில் கட்டுமானப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

    போரின் போது பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் எஸ்சி-250 வான்குண்டு இது என்று போலந்தின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

    வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    வெடிகுண்டு அகற்றப்படும் வரை ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக போலந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த வெடிகுண்டை அகற்றுவதற்கு, வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிந்த வருகின்றனர்.

    details

    அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை: காவல்துறை

    அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஃப்ரியஸ் கூறியுள்ளார்.

    "வெடிக்காத வெடிகுண்டுகளால் மனித உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்து" ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று அறிவித்த காவல்துறை, மக்கள் வெளியேற வேண்டும் என்று பொது அழைப்பு விடுத்தது.

    இரண்டாம் உலகப் போரின்போது, ​​வ்ரோக்லா நகரம் ஜெர்மனியின் ப்ரெஸ்லாவ் நகரமாக இருந்தது.

    'நாட்சி' ஜெர்மனி சரணடைவதற்கு முன், கடுமையான சோவியத் குண்டுவீச்சினால் இந்த நகரம் பேரழிவை கண்டது.

    போருக்குப் பிறகு எல்லைகள் மீண்டும் வரையப்பட்டபோது இந்த நகரம் போலந்தின் ஒரு பகுதியாக மாறியது.

    தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனிக்கு இந்த பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உலகம்

    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலக செய்திகள்
    ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  பாகிஸ்தான்
    இரண்டாவது மாதமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்  சூடான்
    இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்  ஆஸ்திரேலியா
    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன  இங்கிலாந்து
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025