NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 
    உலகம்

    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 

    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 
    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023, 05:51 pm 1 நிமிட வாசிப்பு
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம் 
    வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிந்த வருகின்றனர்.

    இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத ஒரு பெரிய வெடிகுண்டு, தென்மேற்கு போலந்தில் உள்ள வ்ரோக்லா நகரின் ரயில்வே மேம்பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதால், 2,500 குடியிருப்பாளர்கள் இன்று(மே 26) வெளியேற்றப்பட்டனர். 250 கிலோகிராம் எடையுள்ள இந்த வெடிகுண்டு, போலந்து நகரமான வ்ரோக்லாவில் கட்டுமானப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. போரின் போது பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் எஸ்சி-250 வான்குண்டு இது என்று போலந்தின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. வெடிகுண்டு அகற்றப்படும் வரை ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக போலந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெடிகுண்டை அகற்றுவதற்கு, வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிந்த வருகின்றனர்.

    அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை: காவல்துறை

    அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஃப்ரியஸ் கூறியுள்ளார். "வெடிக்காத வெடிகுண்டுகளால் மனித உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்து" ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று அறிவித்த காவல்துறை, மக்கள் வெளியேற வேண்டும் என்று பொது அழைப்பு விடுத்தது. இரண்டாம் உலகப் போரின்போது, ​​வ்ரோக்லா நகரம் ஜெர்மனியின் ப்ரெஸ்லாவ் நகரமாக இருந்தது. 'நாட்சி' ஜெர்மனி சரணடைவதற்கு முன், கடுமையான சோவியத் குண்டுவீச்சினால் இந்த நகரம் பேரழிவை கண்டது. போருக்குப் பிறகு எல்லைகள் மீண்டும் வரையப்பட்டபோது இந்த நகரம் போலந்தின் ஒரு பகுதியாக மாறியது. தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனிக்கு இந்த பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல் யூடியூபர்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்

    உலகம்

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலக செய்திகள்
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன  உலக செய்திகள்
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலகம்
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023