NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு 
    புதுப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் 820 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    03:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820ஆக உயர்ந்துள்ளது.

    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட்டான மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் இரவு 11:11 மணிக்கு(2211 GMT) ஏற்பட்டது.

    கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது.

    புதுப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் 820 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அல்-ஹவுஸ் மற்றும் தாரூடன்ட் மாகாணங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

    டக்கிஒக்

    இதுவரை மொராக்கோ நாட்டில் ஏற்பட்டதிலேயே இதுதான் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    சிச்சாவா, அஜிலால் மற்றும் யூசுஃபியா மாகாணங்களிலும், மராகேஷ், அகாதிர் மற்றும் காசாபிளாங்கா பகுதிகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன.

    மேலும், இந்த நிலநடுக்கத்தால் 672 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 205 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை மொராக்கோ நாட்டில் ஏற்பட்டதிலேயே இதுதான் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலநடுக்கம் அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டது. ஆனால், அங்கு பொருள் சேதமோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

    2004 ஆம் ஆண்டில், வடகிழக்கு மொராக்கோவின் அல் ஹோசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 628 பேர் கொல்லப்பட்டனர்.

    1960 ஆம் ஆண்டில் அகாடிரில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 12,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிரிக்கா
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்

    நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி
    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025