உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?
2016-ல் உலக பொருளாதார மன்றம் (WEF) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும், 2030-ம் தற்போது இருக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை இருக்காது. உலக அதிகாரம் பல நாடுகளின் கைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், எனக் குறிப்பிட்டிருந்தது. தற்போது அப்படி ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுவது இது முதல் முறை அல்ல. இதற்கு ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு மாதிரியான பதில் இருக்கலாம். இது குறித்து கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி உதய் கோடக்கும் ட்வீட் செய்திருக்கிறார்.
உதய் கோடக்கின் ட்வீட்:
அதில், " சந்தை மதிப்பு அடிப்படையில் உலகின் டாப் 10 நிறுவனங்களில் 9 அமெரிக்க நிறுவனங்களும், 1 சவுதி அரேபிய நிறுவனமும் இடம் பெற்றிருக்கிறது. ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் எதுவும் இந்த டாப் 10 பட்டியலில் இல்லை. அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறது என்பது முன்முடிவா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.