NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
    1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.

    துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று(பிப் 7) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) தெரிவித்துள்ளது.

    நேற்று அதிகாலை முதல், துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், USGSஇன் படி, துருக்கியின் ஐந்தாவது பெரிய நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதியைத் தாக்கி உள்ளது.

    துருக்கியில் குறைந்தது 3,419 பேரும், சிரியாவின் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,602 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,021ஆக உள்ளது என்று அதிகாரிகள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நேற்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது.

    துருக்கி

    மிகபெரும் பூகம்ப மண்டலமான துருக்கி

    இதில், நேற்று மதியம் ஏற்பட்ட இரண்டாவது பெரும் நிலநடுக்கமும் அடங்கும். இந்த இரண்டாவது அதிர்வு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருந்தது.

    இதை தொடர்ந்து 6.0 ரிக்டர் அளவில் இன்னொரு பெரிய நிலநடுக்கமும் ஏற்பட்டது.

    தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டே இருப்பதாலும் துருக்கியில் இருக்கும் பனியாலும் மீட்பு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல .

    2020இல் துருக்கி மற்றொரு பெரிய பூகம்பத்தால் தாக்கப்பட்டது. அந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்தது.

    1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்
    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்

    உலக செய்திகள்

    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா
    உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்! உலகம்
    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்
    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி

    உலகம்

    டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது அமெரிக்கா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    20 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை விற்கப்படும் செல்ல பிராணிகள்; விபரம் உள்ளே வாழ்க்கை
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025