NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
    உலகம்

    துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

    துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2023, 04:23 pm 1 நிமிட வாசிப்பு
    துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
    1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.

    இன்று(பிப் 7) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை முதல், துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், USGSஇன் படி, துருக்கியின் ஐந்தாவது பெரிய நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதியைத் தாக்கி உள்ளது. துருக்கியில் குறைந்தது 3,419 பேரும், சிரியாவின் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,602 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,021ஆக உள்ளது என்று அதிகாரிகள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது.

    மிகபெரும் பூகம்ப மண்டலமான துருக்கி

    இதில், நேற்று மதியம் ஏற்பட்ட இரண்டாவது பெரும் நிலநடுக்கமும் அடங்கும். இந்த இரண்டாவது அதிர்வு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருந்தது. இதை தொடர்ந்து 6.0 ரிக்டர் அளவில் இன்னொரு பெரிய நிலநடுக்கமும் ஏற்பட்டது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டே இருப்பதாலும் துருக்கியில் இருக்கும் பனியாலும் மீட்பு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல . 2020இல் துருக்கி மற்றொரு பெரிய பூகம்பத்தால் தாக்கப்பட்டது. அந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்தது. 1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023