NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்
    7.8 அளவிளான நிலநடுக்கம் துருக்கியில் கடைசியாக 1939இல் கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் ஏற்பட்டது. இதில் 33,000 பேர் இறந்தனர்.

    துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2023
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றும் வரும் நிலையில், 14,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது. இதில், நேற்று மதியம் ஏற்பட்ட இரண்டாவது பெரும் நிலநடுக்கமும் அடங்கும்.

    துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வு உணரப்பட்டது. இது 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருந்தது.

    இதை தொடர்ந்து 6.0 ரிக்டர் அளவில் இன்னொரு பெரிய நிலநடுக்கமும் ஏற்பட்டது.

    துருக்கி

    இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் இயங்காது: துருக்கி

    துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி கட்டிடங்களும் அடங்கும்.

    அதே நேரத்தில் சிரியாவும் டஜன் கணக்கான சரிவுகளை அறிவித்துள்ளது. மேலும், அலெப்போவில் உள்ள தொல்பொருள் தளங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

    சிரியாவில் நேற்று மட்டும் குறைந்தது 1,444 பேர் உயிரிழந்ததாக அரசாங்கமும் மீட்புப் படையினரும் தெரிவித்துள்ளனர்.

    துருக்கியின் புதிய உயிரிழப்பு எண்ணிக்கை 2,379ஆக அதிகரித்துள்ளது. எனவே, இரு நாடுகளிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் குறைந்தது 3,823 ஆகக் இருக்கிறது.

    பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது.

    நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால், துருக்கியில் முன்னெச்சரிக்கையாக இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி

    உலக செய்திகள்

    வியட்நாமில் தங்கத்தால் வீடு கட்டிய தொழிலதிபர் - சுற்றுலாத்தலமாக மாற்றி நுழைவு கட்டணம் வசூலிப்பு வைரல் செய்தி
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா
    உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்! உலகம்
    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்

    உலகம்

    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு அமெரிக்கா
    பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து மோடி
    ஆன்லைன் டேட்டிங் செய்கிறீர்களா? நேரில் சந்திக்கும் முன் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் வாழ்க்கை
    உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025