LOADING...
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்! ஒப்புக் கொள்ளாவிட்டால் குண்டுமழை பொழியும் என எச்சரிக்கை
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்!

ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்! ஒப்புக் கொள்ளாவிட்டால் குண்டுமழை பொழியும் என எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2026
07:14 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை மீண்டும் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் அடிபணியாவிட்டால், இதற்கு முன் இல்லாத வகையில் "அதிதீவிரமான" குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொண்டால் மட்டுமே 'Operation Epic Fury' நிறுத்தப்படும். ஈரான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், எங்களது கடற்படை முற்றுகை நீக்கப்பட்டு ஹார்முஸ் நீரிணை ஈரானுக்கும் சேர்த்து உலக நாடுகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும். ஒருவேளை அவர்கள் மறுத்தால், மீண்டும் குண்டுவீச்சு தொடங்கும்; அது முன்னெப்போதையும் விட மிகக் கொடூரமானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒப்பந்தம்

14 அம்ச ரகசிய ஒப்பந்தம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த 'ஒரு பக்க, 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம்' (14-point MOU) தயாராகி வருவதாக 'Axios' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி: உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அடுத்த 30 நாட்களுக்குள் ஒரு நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டல் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கி, முடக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை விடுவிக்கும்.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் நீரிணை முடக்கம்

பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி (LNG) போக்குவரத்து இந்த வழியாகவே நடப்பதால், உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஏப்ரல் 13 முதல் அமெரிக்காவும் இங்குத் தனது கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானாலும், டிரம்பின் இந்த "கடைசி எச்சரிக்கை" ஈரானை மீண்டும் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.

Advertisement