NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்?
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்

    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 23, 2025
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.

    இது உலகளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மாணவர் சமூகத்தினரிடையே!

    டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புபடி, ஹார்வர்டின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட(SEVP) சான்றிதழ் "உடனடியாக ரத்து செய்யப்பட்டது" என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார்.

    "ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நான் எழுதுகிறேன்," என்று அந்தக் கடிதம் கூறுகிறது.

    ஒரு சமூக ஊடகப் பதிவில், "வன்முறை, யூத எதிர்ப்பு மற்றும் அதன் வளாகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்ததற்காக ஹார்வர்டைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக" ஹார்வர்டை அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

    அறிக்கை

    டிரம்ப் நிர்வாகம் என்ன கூறுகிறது?

    "பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்து, தங்களின் பல பில்லியன் டாலர் மானியங்களை பெருவதற்காக மாணவர்களின் அதிக கல்விக் கட்டணத்திலிருந்து பயனடைவது ஒரு பாக்கியம், உரிமை அல்ல. ஹார்வர்டு சரியானதைச் செய்ய ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றது. அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக அவர்கள் தங்கள் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை இழந்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.

    இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    This administration is holding Harvard accountable for fostering violence, antisemitism, and coordinating with the Chinese Communist Party on its campus.

    It is a privilege, not a right, for universities to enroll foreign students and benefit from their higher tuition payments… pic.twitter.com/12hJWd1J86

    — Secretary Kristi Noem (@Sec_Noem) May 22, 2025

    நிச்சயமற்ற நிலை 

    பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களின் நிலை என்ன?

    இந்த முடிவு, நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களை நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்தியுள்ளது.

    சர்வதேச மாணவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்காவில் அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஹார்வர்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 இந்திய மாணவர்களும் அறிஞர்களும் பல்கலைக்கழகத்தில் சேருவதாகக் கூறுகிறது.

    தற்போது, ​​இந்தியாவிலிருந்து 788 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர்.

    இந்த நடவடிக்கை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை கணிசமாக பாதிக்கக்கூடும், இங்கு கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் பட்டதாரி திட்டங்களில் படிக்கின்றனர்.

    அந்த மாணவர்கள் இப்போது தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்க போராட வேண்டியிருக்கும்.

    தற்போதைய மாணவர்கள்

    எனினும், தற்போதைய மாணவர்கள் பட்டம் பெறலாம்!

    ஹார்வர்டின் தற்போதைய சர்வதேச மாணவர்கள், அதாவது, இந்த செமஸ்டரில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெற அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த மாற்றங்கள் 2025-2026 கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று நோயமின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    நடைபெறும் கல்வியாண்டுக்கான ஹார்வர்டின் மாணவர்கள் அடுத்த வாரம் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இன்னும் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும், இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை இழப்பார்கள் என்று நோயெம் கூறினார்.

    எதிர்காலம்

    அட்மிஷன் கடிதம் பெற்ற மாணவர்கள் தற்போது ஹார்வர்டில் சேர முடியுமா?

    இல்லை, டிரம்ப் அரசாங்கம் தனது முடிவை மாற்றினாலோ அல்லது நீதிமன்றம் தலையிட்டால் மட்டுமே இந்த கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் சேர முடியும்.

    இப்போதைக்கு, ஹார்வர்ட் 72 மணி நேரத்திற்குள் கோரிக்கைகளின் பட்டியலுக்கு இணங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கான ஹோஸ்ட் நிறுவனமாக அதன் நிலையை மீட்டெடுக்க முடியும் என்று நோயம் கூறினார்.

    அந்தக் கோரிக்கைகளில் சர்வதேச மாணவர்களுக்கான ஒழுங்குமுறை பதிவுகள், போராட்ட நடவடிக்கைகளின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் போன்ற பல்வேறு பதிவுகளுக்கான கோரிக்கைகள் அடங்கும்.

    சமீபத்திய நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஹார்வர்ட் இரண்டாவது சட்ட சவாலை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. பல்கலைக்கழகம் அதன் பாடத்திட்டம், சேர்க்கை நடைமுறைகள் மற்றும் பணியமர்த்தல் கொள்கைகளை மாற்ற முயற்சித்ததாக நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பல்கலைக்கழகம்
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்? பல்கலைக்கழகம்
    வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் வங்க கடல்
    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி

    பல்கலைக்கழகம்

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் சேலம்
    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய் டெல்லி
    100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்  உத்தரப்பிரதேசம்
    காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்கா

    அமெரிக்கா

    ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 281 பேர் காயம் ஈரான்
    உலகின் முதல் விந்தணு ஓட்டப் பந்தயத்தை நடத்தியது லாஸ் ஏஞ்சல்ஸ்; போட்டியை காண ஆர்வத்துடன் குவிந்த பார்வையாளர்கள் கர்ப்பம்
    இந்தியா-பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்கா; 'பொறுப்பான தீர்வை' நோக்கிச் செயல்பட வலியுறுத்தல் இந்தியா
    பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் இந்திய ராணுவம்

    டொனால்ட் டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்; அமெரிக்காவில் அதிக விற்பனையான ஆடி காருக்கு நேர்ந்த சோகம் ஆடி
    சீனா மீது கூடுதல் வரிகளை விதித்து பழிவாங்கும் டிரம்ப்; மொத்த வரி இப்போது 145% ஆக உயர்வு சீனா
    கிரிப்டோகரன்சி தொடர்பான ஜோ பைடன் உத்தரவு ரத்து; டொனால்ட் டிரம்ப் அதிரடி கிரிப்டோகரண்ஸி
    6,000 உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்துவிட்டதாக அறிவித்த டிரம்ப் நிர்வாகம்; காரணம் என்ன? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025