
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்?
செய்தி முன்னோட்டம்
டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.
இது உலகளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மாணவர் சமூகத்தினரிடையே!
டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புபடி, ஹார்வர்டின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட(SEVP) சான்றிதழ் "உடனடியாக ரத்து செய்யப்பட்டது" என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார்.
"ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நான் எழுதுகிறேன்," என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
ஒரு சமூக ஊடகப் பதிவில், "வன்முறை, யூத எதிர்ப்பு மற்றும் அதன் வளாகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்ததற்காக ஹார்வர்டைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக" ஹார்வர்டை அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
அறிக்கை
டிரம்ப் நிர்வாகம் என்ன கூறுகிறது?
"பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்து, தங்களின் பல பில்லியன் டாலர் மானியங்களை பெருவதற்காக மாணவர்களின் அதிக கல்விக் கட்டணத்திலிருந்து பயனடைவது ஒரு பாக்கியம், உரிமை அல்ல. ஹார்வர்டு சரியானதைச் செய்ய ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றது. அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக அவர்கள் தங்கள் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை இழந்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.
இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This administration is holding Harvard accountable for fostering violence, antisemitism, and coordinating with the Chinese Communist Party on its campus.
— Secretary Kristi Noem (@Sec_Noem) May 22, 2025
It is a privilege, not a right, for universities to enroll foreign students and benefit from their higher tuition payments… pic.twitter.com/12hJWd1J86
நிச்சயமற்ற நிலை
பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களின் நிலை என்ன?
இந்த முடிவு, நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களை நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச மாணவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்காவில் அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹார்வர்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 இந்திய மாணவர்களும் அறிஞர்களும் பல்கலைக்கழகத்தில் சேருவதாகக் கூறுகிறது.
தற்போது, இந்தியாவிலிருந்து 788 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை கணிசமாக பாதிக்கக்கூடும், இங்கு கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் பட்டதாரி திட்டங்களில் படிக்கின்றனர்.
அந்த மாணவர்கள் இப்போது தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்க போராட வேண்டியிருக்கும்.
தற்போதைய மாணவர்கள்
எனினும், தற்போதைய மாணவர்கள் பட்டம் பெறலாம்!
ஹார்வர்டின் தற்போதைய சர்வதேச மாணவர்கள், அதாவது, இந்த செமஸ்டரில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த மாற்றங்கள் 2025-2026 கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று நோயமின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நடைபெறும் கல்வியாண்டுக்கான ஹார்வர்டின் மாணவர்கள் அடுத்த வாரம் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இன்னும் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும், இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை இழப்பார்கள் என்று நோயெம் கூறினார்.
எதிர்காலம்
அட்மிஷன் கடிதம் பெற்ற மாணவர்கள் தற்போது ஹார்வர்டில் சேர முடியுமா?
இல்லை, டிரம்ப் அரசாங்கம் தனது முடிவை மாற்றினாலோ அல்லது நீதிமன்றம் தலையிட்டால் மட்டுமே இந்த கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் சேர முடியும்.
இப்போதைக்கு, ஹார்வர்ட் 72 மணி நேரத்திற்குள் கோரிக்கைகளின் பட்டியலுக்கு இணங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கான ஹோஸ்ட் நிறுவனமாக அதன் நிலையை மீட்டெடுக்க முடியும் என்று நோயம் கூறினார்.
அந்தக் கோரிக்கைகளில் சர்வதேச மாணவர்களுக்கான ஒழுங்குமுறை பதிவுகள், போராட்ட நடவடிக்கைகளின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் போன்ற பல்வேறு பதிவுகளுக்கான கோரிக்கைகள் அடங்கும்.
சமீபத்திய நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஹார்வர்ட் இரண்டாவது சட்ட சவாலை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. பல்கலைக்கழகம் அதன் பாடத்திட்டம், சேர்க்கை நடைமுறைகள் மற்றும் பணியமர்த்தல் கொள்கைகளை மாற்ற முயற்சித்ததாக நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தது.