அமெரிக்க தேர்தல் சட்டத்தில் மாற்றம்: இந்திய வாக்காளர் அடையாள அட்டை முறையை சுட்டிக்காட்டி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் வாக்காளர் பதிவின் போது குடியுரிமைச் சான்றையும், வாக்களிக்கும் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் கட்டாயமாக்கும் 'SAVE America Act' சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்தின் அவசியத்தை எடுத்துரைக்க இந்தியாவின் தேர்தல் முறையை அவர் பிரதான உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் கேள்வி
தமது சோஷியல் மீடியா தளமான 'ட்ரூத் சோஷியலில்' பதிவிட்டுள்ள டிரம்ப், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமெரிக்க அதிகாரிகளிடம் கேட்ட கேள்வியைக் குறிப்பிட்டுள்ளார்.
"சென்ற தேர்தலில் இந்தியாவில் 64.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்; அதில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அஞ்சல் வழியில் வாக்களித்தனர், மேலும் ஒவ்வொரு வாக்காளரிடமும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இருந்தது" எனக்கூறிய டிரம்ப், முறையான அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல் நடத்த முடிகிறது என்ற இந்திய ஆணையரின் கேள்வியை மேற்கோள்காட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
President Donald J. Trump is absolutely correct! 646 MILLION voters, every single one required an ID in India’s last election. Congress should pass THE SAVE AMERICA ACT! pic.twitter.com/lqQHSZvWk7
— Ambassador Sergio Gor (@USAmbIndia) August 18, 2026
சேவ் அமெரிக்கா
சேவ் அமெரிக்கா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால், கூட்டாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கப் பதிவு செய்வோர் தாங்கள் அமெரிக்கக் குடிமக்கள் என்பதற்கான ஆவணச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் முன் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்படும்.
டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளை போல அஞ்சல் வழி வாக்களிப்பிற்கும் இதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முட்டுக்கட்டை
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டை
அமெரிக்க மக்களிடையே வாக்காளர் அடையாள அட்டைக்கு 83% ஆதரவு இருந்தாலும், குடியுரிமை சான்றுகளை உடனடியாகச் சமர்ப்பிப்பதில் சுமார் 2.1 கோடி மக்களுக்குச் சிரமம் இருக்கும் எனக் ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கின்றனர்.
பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதிலும், 100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான 60 வாக்குகள் ஆளும் குடியரசுக் கட்சிக்கு இல்லாததால், மசோதாவை சட்டமாக்குவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.