LOADING...
மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2025
08:31 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில், தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். இந்துக்களால் கொண்டாடப்படும் "தீபங்களின் விழாவை" அனுசரிக்க FBI இயக்குனர் காஷ் படேல் மற்றும் தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கூட்டத்தில் இணைந்தனர். அப்போது, விழாவிற்கு சற்று முன்பு தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து பேசியதாக டிரம்ப் கூறினார். தொடர்ந்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினோம், ஆனால் பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றிப் பேசினோம்" என்றார். அதோடு, எதிர்காலத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவு ரஷ்ய எண்ணெயை வாங்காது என்றும் அவர் மீண்டும் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கலந்துரையாடல்

இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களும், மோடியுடனான கலந்துரையாடலும்

"இந்திய மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று உங்கள் பிரதமருடன்(மோடி) பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம். நாங்கள் வர்த்தகம் பற்றி பேசினோம். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம், ஆனால் பெரும்பாலும் வர்த்தக உலகம். அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்," என்று அவர் கூறினார். இந்த உரையாடலின் போது பிராந்திய அமைதியை பற்றி சுருக்கமாக தொட்டதாக அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறினார், மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலை தவிர்க்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். அதோடு பிரதமர் மோடியுடனான தனது பல வருட உறவை நினைவு கூர்ந்த அவர், மோடியை "ஒரு சிறந்த மனிதர்" மற்றும் "ஒரு சிறந்த நண்பர்" என்று பாராட்டினார்.