NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு

    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.

    மேலும், குறிப்பாக வீட்டிற்குள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பார்க்கும்போது, முகக்கவசம் அணிவதை சிங்கப்பூர் அரசு "வலுவாக ஊக்குவிக்கிறது."

    டிசம்பர் 3 முதல் 9ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், 56,043 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய வாரத்தை விட 75% அதிகம் எனவும் சுகாதாரத்துறை கூறுகிறது.

    தினசரி கொரோனா பாதிப்பு 225லிருந்து, 350 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும், 9 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அண்மையில், சிங்கப்பூரில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    சிங்கப்பூரில் பரவி வரும்  JN.1 வகை கொரோனா

    பெரும்பாலானோர் JN.1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது BA.2.86 இன் துணைப் பிரிவு ஆகும். இந்தியாவில் கேரளாவில் இந்த வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தனிப்பட்ட மற்றும் சமூகப் பொறுப்பைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ள சுகாதார அமைச்சகம்,

    கடுமையான சுவாச நோய்த்தொற்று அறிகுறிகளுடன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்கவும், மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

    தீவிர நோய் தொற்று ஏற்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தீவிர நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மட்டும் மருத்துவமனையை அணுக சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

    மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை, வெளியிடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    முக கவசம் அணிய வலியுறுத்தும் சிங்கப்பூர்

    🦠 The estimated number of COVID-19 cases has risen to 56,043 in the week of 3 to 9 December.

    💪 To stop the spread of COVID-19, let's exercise social responsibility.

    😷 Refer to this graphic for a list of situations where mask-wearing is encouraged. pic.twitter.com/3TgkILg3dj

    — Ministry of Health (@MOHSingapore) December 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிங்கப்பூர்
    கோவிட் 19
    கோவிட்
    கொரோனா

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலகம்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    கோவிட் 19

    இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு இந்தியா
     இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு இந்தியா
    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு இந்தியா

    கோவிட்

    இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்  வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025