NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பூச்சிக்கொல்லி மருந்தில் இருக்கும் ரசாயனங்கள் 'எவரெஸ்ட்' மீன் கறி மசாலாவில் இருந்ததால் அதை திரும்பப் பெற உத்தரவிட்டது சிங்கப்பூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூச்சிக்கொல்லி மருந்தில் இருக்கும் ரசாயனங்கள் 'எவரெஸ்ட்' மீன் கறி மசாலாவில் இருந்ததால் அதை திரும்பப் பெற உத்தரவிட்டது சிங்கப்பூர்

    பூச்சிக்கொல்லி மருந்தில் இருக்கும் ரசாயனங்கள் 'எவரெஸ்ட்' மீன் கறி மசாலாவில் இருந்ததால் அதை திரும்பப் பெற உத்தரவிட்டது சிங்கப்பூர்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2024
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததால் எவரெஸ்டின் ஃபிஷ் கறி மசாலாவை திரும்பப் பெற சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.

    எவரெஸ்ட் என்பது இந்திய உணவு தயாரிப்பு நிறுவனமாகும்.

    எவரெஸ்ட் தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் Sp முத்தையா அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எவரெஸ்டின் ஃபிஷ் கறி மசாலாவை திரும்பப் பெறுமாறு சிங்கப்பூர் உணவு முகமை (SFA) வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

    எத்திலீன் ஆக்சைடை உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் நுண்ணுயிர் மாசுபாட்டைத் தடுக்க இந்த இரசாயன பொருள் புகைபிடிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் SFA கூறியுள்ளது.

     சிங்கப்பூர் 

    "நுகர்வோர் அதை உட்கொள்ள வேண்டாம்": SFA அறிவுரை 

    குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள உணவை உட்கொள்வதால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், நீண்ட காலம் அதை உண்டால் அது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "இதை உட்கொள்வதால் உடனடி ஆபத்து இல்லை. எனவே, இந்த பொருளை உட்கொள்வதை முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும்," என்று அது கூறியது.

    "சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து கவலைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். நுகர்வோர் தங்கள் கொள்முதல் மையத்தை விசாரணைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்" என்று SFA மேலும் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிங்கப்பூர்

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலகம்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025