NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 
    உலகம்

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    April 21, 2023 | 01:52 pm 1 நிமிட வாசிப்பு
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 
    சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆவார்.

    கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்ற தகவல் நேற்று(ஏப் 20) வெளியாகியது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் தான் பங்கேற்பது, SCO சாசனத்தின் மீதிதான பாகிஸ்தானின் அர்ப்பணிப்பை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றும், இந்த வருகையை இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பார்க்கப்படக்கூடாது என்றும் அமைச்சர் பிலாவல் கூறியுள்ளார்.

    12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர்

    நேற்று ஒளிபரப்பான துன்யா நியூஸ் நிகழ்ச்சியின் கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். "SCO சாசனத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த பயணம் இருதரப்பு உறவுகளுக்கானதாக பார்க்கப்படாமல் SCOவின் சூழலில் பார்க்கப்பட வேண்டும்." என்று பிலாவல் பூட்டோ கூறியுள்ளார். மே 4-5 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள SCO வெளியுறவுத்துறை அமைச்சர்கள்(CFM) கூட்டத்தில், பூட்டோ-சர்தாரி பாகிஸ்தான் தூதரகத்தை வழிநடத்துவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆவார். 2011ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் இந்தியா வந்திருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பாகிஸ்தான்
    வெளியுறவுத்துறை
    உலகம்
    உலக செய்திகள்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 11,692 கொரோனா பாதிப்பு: 28 பேர் உயிரிழப்பு கொரோனா
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  டெல்லி
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்

    பாகிஸ்தான்

    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  இந்தியா
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் சீனா
    2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும் உலகம்
    பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு யுகே

    வெளியுறவுத்துறை

    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கை

    உலகம்

    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா ரஷ்யா
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! நாசா
    மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல் ரஃபேல் நடால்
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  சீனா

    உலக செய்திகள்

    அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி! ஆட்குறைப்பு
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல் அமெரிக்கா
    பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு அமெரிக்கா
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023