NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்க உள்ளார் ஷெபாஸ் ஷெரீப் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்க உள்ளார் ஷெபாஸ் ஷெரீப் 

    பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்க உள்ளார் ஷெபாஸ் ஷெரீப் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2024
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப், இன்று இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம், தேர்தலை முன்னிட்டு, ஷெபாஸ் ஷெரீப் தனது பிராட்மர் பதவிலையை ராஜினாமா செய்தார்.

    அதை தொடர்ந்து, தேர்தல் முடியும் வரை நாட்டை கவனிக்க தற்காலிக அரங்கம் ஒன்று பதியேற்றது.

    336 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் அவர் 201 வாக்குகளைப் பெற்றார், தனது போட்டியாளரான உமர் அயூப் கானை(92) தோற்கடித்தார்.

    மூன்று வாரங்களுக்கு முன், பாகிஸ்தானில் தேசியத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அதில் ஒரு கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் 

    இம்ரான் கானின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் சட்டமியற்றுபவர்கள்

    பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), மற்றும் PML-N ஆகியவை தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டன.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) படி, சுயேச்சை வேட்பாளர்கள் 101 இடங்களையும், PML-N 75 இடங்களையும் வென்றனர். PPP 54 இடங்களையும், முட்டாஹிதா குமி இயக்கம்-பாகிஸ்தான்(MQM-P) 17 இடங்களையும் வென்றன.

    இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவுடன் செயல்படும் சன்னி இத்தேஹாத் கவுன்சில்(SIC) ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சட்டமியற்றுபவர்கள் இம்ரான் கானின் விடுதலைக்கு அழைப்பு விடுத்ததுடன், ஷெபாஸ் ஷெரீப் தேர்தலில் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி தற்கொலைப்படை
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025