NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்
    இந்த தாக்குதலை பலர் நேரலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

    சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், திங்கள் மாலை நடைபெற்றதாக சிட்னி காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    இதில் மேலும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பிரசங்கம் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் இந்த கத்தி குத்தும் நடைபெற்றுள்ளது.

    இந்த தாக்குதலை பலர் நேரலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தாக்குதலுக்கான காரணத்தை அறிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதல்

    சிட்னியில் தொடரும் மனித தாக்குதல்கள்

    ஆன்லைனில் பரவும் காணொளிகளில், ஒரு நபர் பிரசங்கம் செய்துகொண்டிருந்த பிஷப்பை நோக்கி நிதானமாக நடந்து சென்று, அவரை கையில் இருந்த ஒரு ஆயுதத்தால் தொடர்ந்து குத்துவது காட்சிப்படுப்படுத்தப்பட்டுள்ளது.

    உடனே சம்பவ இடத்தில் இருந்த வழிபாட்டாளர்கள் பிஷப்பைக் காப்பாற்றும் முயற்சியில் தாக்குதல் நடத்தியவரை நோக்கி விரைந்தனர்.

    அதனை தொடர்ந்து, வழிபாட்டாளர்களை அந்த நபர் கத்தியால் குத்தத் தொடங்குகிறார்.

    காயமடைந்த நபர்கள், உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளாகாத போதிலும், மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக 3 நாட்களுக்கு முன்னர் சிட்னியின் போண்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    ஆஸ்திரேலியா

    அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப் அமெரிக்கா
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை  ஓ.பன்னீர் செல்வம்
    ஆஸ்திரேலியாவில் தோல்வியில் முடிந்த 'குரல் முன்மொழிவு' வாக்கெடுப்பு பிரதமர்
    உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு  இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025