NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்தில் வில்-அம்பை கொண்டு 3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்தில் வில்-அம்பை கொண்டு 3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு 

    இங்கிலாந்தில் வில்-அம்பை கொண்டு 3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 10, 2024
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜூலை 10 ஆம் தேதி லண்டனுக்கு அருகே ஒரு வீட்டில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்து, வில்-அம்பு ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படும் ஒரு நபரை பிரிட்டிஷ் போலீசார் தேடி வருகின்றனர்.

    26 வயதான கைல் கிளிஃபோர்ட் தான் இந்த கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் நம்புவதாக ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    பலியானவர்கள் பிபிசி 5 லைவ்வின் பந்தய வர்ணனையாளரான ஜான் ஹன்ட்டின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என்று டெலிகிராப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    செவ்வாய்க்கிழமை மாலை புஷேயில் உள்ள ஜான் ஹன்ட்டின் வீட்டில் மூன்று பெண்கள் பலத்த காயம் அடைந்ததை அடுத்து, காவல்துறை மற்றும் துணை மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு 

    Chief Superintendent Jon Simpson spoke outside Hatfield Police Station as three women aged 25, 28 and 66 who were killed in Bushey were targeted and attacked with a crossbow and other weapons. pic.twitter.com/N9St2xGKIn

    — London Live (@LondonLive) July 10, 2024

    லண்டன் 

    ஒரு குடுமபத்தை சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி 

    செவ்வாய்க்கிழமை மாலை ஜான் ஹன்ட் பிபிசியில் வேலை பார்த்து கொண்டிருந்ததால், அவர் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிய பிறகே சம்பவம் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

    அதன் பிறகு, மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் 3 பெண்களையும் காப்பாற்ற முடியவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் என்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த கைல் கிளிஃபோர்ட் என்பவருக்கு ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் போலீசார் அவசர வாரண்டை வெளியிட்டுள்ளனர்.

    முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜான் ஹன்ட்(58) கடந்த 20 ஆண்டுகளாக பிபிசி ரேடியோ 5 லைவ்வில் பணியாற்றி வருகிறார்.

    இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    லண்டன்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    இங்கிலாந்து

    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீதான சிறுநீரகக் திருட்டு குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு விசாரணை டெல்லி
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு யுகே
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025