NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்
    நேர்மையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் - பாகிஸ்தான் பிரதமர்

    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் தவறை ஒப்புக்கொள்வது போல, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர், 'இந்தியாவுடன் போர்தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம்" என்றும், இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்துவருகிறது.

    இத்தகைய சூழலில்தான் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் அந்த பேட்டியில், இந்தியாவுடன் மூன்று போர்கள் நடத்தியுள்ளோம் என்றும், அவை மக்களுக்கு துன்பம், வறுமை, வேலையின்மை மட்டுமே கொண்டுவந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

    நேர்மையான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

    இந்திய பிரதமர் மோடியை நேர்மையான பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

    மேலும் பேசிய அவர், 'எங்கள் வளங்களை வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இருநாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ள நிலையில், போர் மூண்டால் பெரும் இழப்புகள் உண்டாகும். எனவே, இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து, அமைதியான உறவு இருந்தால் இரு நாடுகளும் வளர்ச்சிபெறும், காஷ்மீர் போன்று நடக்கும் பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும் என்று கூறிய அவர், பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்றும் கூறினார்.

    மேலும், அமைதியாக வாழ்ந்து வளர்ச்சிபெறுவதா அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பதா என்பது இருநாடுகளின் கைகளில் தான் உள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர்
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    உலகம்

    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு உலக செய்திகள்
    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா! அமெரிக்கா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025