Page Loader
IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான்
MF-உடன் பேச்சுவார்த்தை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2024
05:56 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசாங்கம், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான கடனை திருப்பிச்செலுத்த உதவுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் புதிய கடனைப்பெற திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. IMF-உடன் நிதி வசதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்நாடு முயல்கிறது என்றும், பேச்சுவார்த்தை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும் அந்த செய்தி அறிக்கை கூறுகிறது. IMF உதவியின் காரணமாக, கடந்த ஆண்டு பாகிஸ்தான் இயல்புநிலைக்கு சற்றே திரும்பியது. எனினும் அந்த திட்டம் அடுத்த மாதம் காலாவதியாகிறது. அதனால் இந்த புதிய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருக்க நீண்ட கால ஏற்பாட்டை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பாகிஸ்தான்

நிதி கோரும் பாகிஸ்தான்

பிணை எடுப்பிற்கு முன்னதாக, பாகிஸ்தான் IMF கோரிய பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் வரவு செலவுத் திட்டத்தை திருத்துதல், அதன் முக்கிய வட்டி விகிதத்தில் உயர்வு மற்றும் மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் அதிகரிப்பு ஆகியவை அதில் அடங்கும். IMF ஊழியர்கள் தேவையான நீண்ட கால சீர்திருத்த முயற்சிகள் குறித்து அதிகாரிகளுடன் உரையாடி வருகின்றனர் என கூறப்படுகிறது. IMFன் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பாகிஸ்தானின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள, ஒரு புதிய ஏற்பாட்டின் மூலம் பாக்கின் புதிய அரசாங்கம் நிதி கோரினால், அது இருக்கும் பட்சத்தில், நிதி கிடைக்கும் என்று கூறினார்.