NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்
    குண்டு வெடிப்பு ஏற்பட்ட பகுதி.

    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

    எழுதியவர் Srinath r
    Dec 05, 2023
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக, அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஜியோ செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.

    சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததால், பாபு கர்ஹி பகுதியின், வார்சாக் சாலைப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    காயமடைந்தவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர்.

    மேலும், காயைமடைந்த குழந்தைகள் அனைவரும், 7- 10 வயது உடையவர்கள் என ஜியோ செய்திகள் கூறுகிறது.

    ஜியோ செய்திகளிடம் பேசிய அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் அர்ஷத் கான், குண்டுவெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 9:10 நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

    2nd card

    பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான வன்முறை 34% அதிகரிப்பு

    சாலையோரத்தில் சிமெண்ட் கல் கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 4 கிலோ வெடி பொருட்கள் வெடித்ததால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

    வெடிவிபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அர்ஷத் கான், திருடுவதற்காக குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

    வெடி விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் சில கார் கண்ணாடிகளும், அருகில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்ததாக, மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதத்தில், கைபர் பக்துன்க்வாவின், தேரா இஸ்மாயில் கான் பகுதியில் காவல்துறையினரை நோக்கி, நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் ஐவர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர்.

    மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான பாகிஸ்தான் நிறுவனத்தின்(PICSS) தரவுகளின் படி, கடந்த மாதம் பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான வன்முறை 34% அதிகரித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

    WARNING - SENSITIVE CONTENT

    At least two children injured in Peshawar blast

    Read more: https://t.co/J8q2ClZhmU#GeoNews

    — Geo English (@geonews_english) December 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குண்டுவெடிப்பு
    பாகிஸ்தான்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    பாகிஸ்தான்

    2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் உலகம்
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பயங்கரவாதம்
    இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு  சிறை
    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம் அமெரிக்கா

    காவல்துறை

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்

    காவல்துறை

    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025