NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
    சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2025
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ஊடகமான டான் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு, இந்தியாவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையை அறிவிப்பதற்காக கூடி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விவாதித்துள்ளது.

    அப்போது, பஹல்காம்பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழப்புகளைக் கண்டிப்பதாக கூறி, அதேநேரம் இந்தியாவின் நடவடிக்கையை நிராகரித்தது.

    அதை "ஒருதலைப்பட்சமானது, அநீதியானது மற்றும் அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டது" என்று கூறியது.

    மேலும், இதனால் சிம்லா ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

    சிம்லா ஒப்பந்தம்

    சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய அறிவிப்புகள்

    1971 போருக்குப் பிறகு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளின் ஒரு மையமாக இருந்தது.

    காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) நிறுவியது மற்றும் இரு நாடுகளும் நேரடி உரையாடல் மூலம் சச்சரவுகளைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் உறுதியளித்தது.

    இந்நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்து, பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    மேலும், வாகா-அட்டாரி எல்லையை வர்த்தகத்திற்காக காலவரையின்றி மூடுவது, இந்திய நாட்டினருக்கான சார்க் விசா விலக்குகளை நிறுத்தி வைப்பது மற்றும் தனிநபர் அல்லாதவர்களாக அறிவிக்கப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவது ஆகிய அறிவிப்புகளையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

    கூடுதலாக, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை 30 ஆக பாகிஸ்தான் குறைக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பஹல்காம்
    இந்தியா

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    பாகிஸ்தான்

    மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள அவரது மூதாதையர் கிராமம் காஹ்வில் இரங்கல் மன்மோகன் சிங்
    பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவிப்பு ஆப்கானிஸ்தான்
    ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியுறவுத்துறை
    'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு  வானிலை ஆய்வு மையம்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு

    இந்தியா

    இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டும் சீனா; 'இந்திய நண்பர்களுக்கு' 85,000 விசாக்கள் வழங்கியது சீனா
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல் ஐநா சபை
    இந்தியாவில் முதல்முறை; எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே இந்திய ரயில்வே
    24% வளர்ச்சியுடன் 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் வணிக வாகன ஏற்றுமதியில் இசுசு மோட்டார்ஸ் முதலிடம் வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025