NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்
    உலகம்

    பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்

    பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2023, 09:06 pm 1 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்
    இன்று இரவு 10 மணிக்குள் மின்சாரம் திரும்பிவிடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்

    பாகிஸ்தானில் இன்று(ஜன 23) அதிகாலை தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய நகரங்களான கராச்சி, தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தெற்கு பாகிஸ்தானில் "அதிர்வெண் மாறுபாடு" ஏற்பட்டதைத் தொடர்ந்து மின்சார கிரிட் செயலிழந்தது என்று பாகிஸ்தான் மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கூறியுள்ளார். இது "ஒரு பெரிய நெருக்கடி அல்ல", விரைவில் மின்சாரம் திரும்பும் என்று அவர் மேலும் கூறி இருக்கிறார். பாகிஸ்தான் அடிக்கடி மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கடைசியாக அக்டோபரில் ஏற்பட்ட பெரிய மின்தடையின் போது மின்சாரம் மீண்டும் வர பல மணிநேரம் ஆனது.

    எதனால் இந்த மின்வெட்டு ஏற்பட்டது?

    உள்ளூர் நேரப்படி சுமார் 07:30 மணிக்கு(02:30 GMT) மின்சார கிரிட் "அதிர்வெண் இழப்பை சந்தித்தது, இது ஒரு பெரிய செயலிழப்பை ஏற்படுத்தியது" என்று எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இதை மீட்டமைக்க வேலைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது. இன்று இரவு 10 மணிக்குள்(பாகிஸ்தான் உள்ளூர் நேரம்) மின்சாரம் திரும்பிவிடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். "குளிர்காலத்தில், நாடு முழுவதும் மின்சாரத் தேவைகுறைவாக இருப்பதால், பொருளாதாரத்தை கட்டுப்படுத்த, நாங்கள் எங்கள் மின் உற்பத்தி அமைப்புகளை இரவில் தற்காலிகமாக மூடி விடுவோம்" என்று அவர் ஜியோ டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார். இதை மீண்டும் காலை வேளையில் 'ஆன்' செய்த போது மின்சார கிரிட்டில் ஏற்பட்ட வோல்ட்டேஜ் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    உலகம்

    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023