NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்
    இன்று இரவு 10 மணிக்குள் மின்சாரம் திரும்பிவிடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்

    பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2023
    09:06 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் இன்று(ஜன 23) அதிகாலை தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

    மிகப்பெரிய நகரங்களான கராச்சி, தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தெற்கு பாகிஸ்தானில் "அதிர்வெண் மாறுபாடு" ஏற்பட்டதைத் தொடர்ந்து மின்சார கிரிட் செயலிழந்தது என்று பாகிஸ்தான் மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கூறியுள்ளார்.

    இது "ஒரு பெரிய நெருக்கடி அல்ல", விரைவில் மின்சாரம் திரும்பும் என்று அவர் மேலும் கூறி இருக்கிறார்.

    பாகிஸ்தான் அடிக்கடி மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கடைசியாக அக்டோபரில் ஏற்பட்ட பெரிய மின்தடையின் போது மின்சாரம் மீண்டும் வர பல மணிநேரம் ஆனது.

    மின்வெட்டு

    எதனால் இந்த மின்வெட்டு ஏற்பட்டது?

    உள்ளூர் நேரப்படி சுமார் 07:30 மணிக்கு(02:30 GMT) மின்சார கிரிட் "அதிர்வெண் இழப்பை சந்தித்தது, இது ஒரு பெரிய செயலிழப்பை ஏற்படுத்தியது" என்று எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இதை மீட்டமைக்க வேலைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    இன்று இரவு 10 மணிக்குள்(பாகிஸ்தான் உள்ளூர் நேரம்) மின்சாரம் திரும்பிவிடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

    "குளிர்காலத்தில், நாடு முழுவதும் மின்சாரத் தேவைகுறைவாக இருப்பதால், பொருளாதாரத்தை கட்டுப்படுத்த, நாங்கள் எங்கள் மின் உற்பத்தி அமைப்புகளை இரவில் தற்காலிகமாக மூடி விடுவோம்" என்று அவர் ஜியோ டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

    இதை மீண்டும் காலை வேளையில் 'ஆன்' செய்த போது மின்சார கிரிட்டில் ஏற்பட்ட வோல்ட்டேஜ் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உலகம்

    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கை
    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உலக செய்திகள்
    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்? ஓடிடி
    இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025