Page Loader
2019ஆம் ஆண்டு அபிநந்தன் வர்த்தமானைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அதிகாரி தலிபான் மோதலில் கொல்லப்பட்டார்
இந்திய விமானி அபிநந்தன் வர்தமனைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா

2019ஆம் ஆண்டு அபிநந்தன் வர்த்தமானைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அதிகாரி தலிபான் மோதலில் கொல்லப்பட்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 25, 2025
01:05 pm

செய்தி முன்னோட்டம்

2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமனைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். "தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின் போது (IBO) பாதுகாப்புப் படையினர், 11 இந்திய ஆதரவு பயங்கரவாதிகளைக் கொன்றனர். அதே நேரத்தில் இரண்டு பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்" என்று பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது இரண்டு பாதுகாப்புப் படையினருடன் சேர்த்து, 11 TTP பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல்

தாக்குதலில் தன் நாடு வீரர்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் 

"நடவடிக்கையின் போது, ​​சொந்தப் படையினர் குவாரிஜ் இருப்பிடத்தை திறம்படத் தாக்கினர்," என்று TTP-யைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் குறிப்பிட்டு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "பதினொரு இந்திய ஆதரவு பெற்ற குவாரிஜ் வீரர்கள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்" என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அபிநந்தன்

அபிநந்தனை சிறை பிடித்த மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா

புல்வாமா தாக்குதலுக்குப் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்திய போது, அப்போதைய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பயணித்த அவரது விமானமும் பாகிஸ்தான் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தன் வர்தமான் விமானத்தை விட்டு வெளியேறும் போது, கட்டுப்பாட்டுக் கோட்டின் (LoC) மறுபுறத்தில் தரையிறங்கியதால் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.