NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம்
    கோல்ரா, பாரா காஹு, ராம்னா, கன்னா மற்றும் CTD காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது

    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 27, 2023
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக மார்ச் 18ஆம் தேதி பெடரல் ஜூடிசியல் வளாகத்தில் (FJC) நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஏழு வழக்குகளில் அவருக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்(IHC) ஜாமீன் வழங்கியுள்ளது.

    இம்ரான் கான், இன்று(மார் 27) IHC இல் தாக்கல் செய்த மனுக்களில், கோல்ரா, பாரா காஹு, ராம்னா, கன்னா மற்றும் CTD காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு வழக்குகளில் பாதுகாப்பு ஜாமீன் கோரினார்.

    மார்ச் 18ஆம் தேதி தோஷகானா வழக்கில் இம்ரான் கான் பெடரல் நீதிமன்றத்தில் ஆஜரான போது, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த வன்முறையை அடுத்து இந்த வழக்குகள் பதிவு ப்பட்டன.

    இஸ்லாமாபாத்

    144 தடை உத்தரவை விதித்திருந்த இஸ்லாமாபாத் நிர்வாகம்

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனுவை IHC தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி மியாங்குல் ஹசன் ஔரங்கசீப் ஆகியோர் அடங்கிய இரு நபர் கொண்ட IHC டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

    இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று இந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்களை வழக்கறிஞர் சல்மான் சப்தார் என்பவர் சமர்ப்பித்தார்.

    "மேலும், தனிப்பெரும் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால், மனுதாரருக்கு முன்-ஜாமீன் வழங்கப்படாவிட்டால், அவரது அரசியல் எதிரிகளால் தங்கள் அரசியல் லட்சியங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற அச்சம் உள்ளது." என்றும் இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இஸ்லாமாபாத் நிர்வாகம் இதற்காக இன்று 144 தடை உத்தரவை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்

    உலகம்

    LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் ஆரோக்கியம்
    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை இந்தியா
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலக செய்திகள்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025