Page Loader
சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா முயற்சி
சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், சீனா திட்டம்

சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா முயற்சி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 30, 2025
03:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய பிராந்திய குழுவை உருவாக்கும் திட்டங்களை பாகிஸ்தானும் சீனாவும் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேறிய நிலையில் உள்ளன. கடந்த ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங்கில் நடந்த இதுதொடர்பான சமீபத்திய கூட்டத்தில் பங்களாதேஷும் கலந்து கொண்டது. இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளை முன்மொழியப்பட்ட புதிய கூட்டமைப்பில் சேர்ப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

சார்க்

சார்க் அமைப்பு செயலாற்றுப் போனதன் பின்னணி

பிராந்திய ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக 1985 இல் உருவாக்கப்பட்ட சார்க், 2016 இல் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த உரி பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த 19வது சார்க் உச்சிமாநாட்டை இந்தியாவும் பிற உறுப்பு நாடுகளும் புறக்கணித்ததிலிருந்து திறம்பட செயலற்ற நிலையில் உள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் முன்மொழியப்பட்ட புதிய குழுவை பிராந்திய இணைப்புக்கு முக்கியமானதாகக் கருதினாலும், பங்களாதேஷ் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையையும் மறுத்துள்ளது. குன்மிங் சந்திப்பு ஒரு அதிகாரப்பூர்வ அளவிலான தொடர்பு மட்டுமே என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் சீனா உருவாக்கும் எந்தவொரு பிராந்திய குழுவிலும் இணைய பிற தெற்காசிய நாடுகளும் மறுத்துவிடும் நிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.