NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு
    அவர்காளுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அவதூறான உள்ளடக்கத்தை அகற்றவில்லை: PTA

    விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2023
    08:14 pm

    செய்தி முன்னோட்டம்

    அவதூறான உள்ளடக்கங்களை அகற்ற மறுத்ததால், பாகிஸ்தான் விக்கிப்பீடியாவை முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    விக்கிப்பீடியா பாகிஸ்தானுக்கு இணங்காத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்(PTA) எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    "புனிதமானதை அவதூறாக பேசும் உள்ளடங்களை" தடுப்பதற்காக/அகற்றுவதற்காக விக்கிபீடியாவை அணுகியதாக PTA கூறியுள்ளது.

    விக்கிப்பீடியா உண்மையில் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரித்தபோது, ​​"ஆம்" என்று PTA செய்தித் தொடர்பாளர் ஒருவர் பதிலளித்திருக்கிறார்.

    விக்கிபீடியா என்பது ஒரு இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமாகும். இது உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு திருத்தப்பட்டு வருகிறது. மேலும், இது விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.

    பாகிஸ்தான்

    சட்டவிரோத உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டால் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும்

    ஒரு அறிக்கையை அனுப்பி குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் அகற்றுவதற்காக விக்கிபீடியாவை அணுகியதாக அந்த PTA செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    அவர்காளுக்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அவதூறான உள்ளடக்கத்தை அகற்றவும் இல்லை அதற்கு பதிலளிக்கவும் இல்லை என்று கூறிய அவர்,

    புகாரளிக்கப்பட்ட சட்டவிரோத உள்ளடக்கம் தடுக்கப்பட்டால்/அகற்றப்பட்டால் விக்கிப்பீடியாவின் சேவைகளை மீட்டெடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை கடந்த காலங்களில் "அவதூறான உள்ளடக்கத்தை" கொண்டிருந்தது எனக் கருதப்பட்டதால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டன.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் "புனிதமானதை அவதூறாக பேசுவது" என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    உலகம்

    கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்; கூகுள்
    இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிடக்கூடாது! ஊபர் CEO தாரா கோஸ்ரோஷாஹி அட்வைஸ் தொழில்நுட்பம்
    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் இந்தியா
    சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025