NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் pc: NDTV

    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 18, 2024
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை ஈரானில் உள்ள "பயங்கரவாத மறைவிடங்களுக்கு" எதிராக பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது.

    முன்னதாக பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள பலூச்சி குழுவான ஜெய்ஷ் அல்-அட்லின் தலைமையகம் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதை கடுமையாக கண்டித்த பாகிஸ்தான், இதற்கான "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று ஈரானை எச்சரித்த மறுநாள், பாகிஸ்தான் இந்த பதிலடி தாக்குதலை தொடுத்துள்ளது.

    "மார்க் பார் சர்மாச்சார்" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின் போது பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    எனினும் வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    card 2

    ஈரான் நடத்திய தாக்குதல் எதற்கு?

    பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு தளங்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC) அறிவித்தது.

    இதற்கு கடுமையாக கண்டித்த பாகிஸ்தான், தூண்டுதல் எதுவும் இல்லாமல் ஈரான் தங்களது வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாகவும், இந்த அத்துமீறலால் கடுமையான எதிர்வினைகள் ஏற்படும் என எச்சரித்தது.

    அதன்படியே, இந்த பதில் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

    "இன்று காலை பாகிஸ்தான், ஈரானின் சியெஸ்டன்-ஓ-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பயங்கரவாத பதுங்கு குழிகளுக்கு எதிராக மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பாக குறிவைக்கப்பட்ட துல்லியமான இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டது" என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    ஈரான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 5 பேர் பலி, 21 பேர் காயம் குண்டுவெடிப்பு
    பாகிஸ்தானின் மியான்வாலி விமானப்படை தளம் தாக்குதலுக்கு உள்ளானது; 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் விமானப்படை
    NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு ஒருநாள் உலகக்கோப்பை
    ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான் பிரதமர்

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்

    ஈரான்

    ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின் உலகம்
    ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு நோபல் பரிசு
    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்? இஸ்ரேல்
    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025