NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு
    எரியும் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

    அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 14, 2023
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள 'சவுத்ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்ஸ்' என்ற ஒரு குடும்ப பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தால் 18,000க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன.

    இந்த சம்பவம் அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட தீ விபத்துகளிலேயே பெரியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. பண்ணையின் உரிமையாளர்கள் சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தால் பகிரப்பட்ட படங்கள், பண்ணையில் இருந்து பெரும் புகை வெளியே வருவதை காட்டியது.

    எரியும் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    details

    வருத்தம் தெரிவித்த விலங்குகள் நல நிறுவனம்

    பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பண்ணைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான பண்ணை விலங்குகளைக் கொல்லும் தீ விபத்துகளை தடுக்க, கூட்டாட்சி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று விலங்குகள் நல நிறுவனம் (AWI) தெரிவித்துள்ளது.

    இத்தகைய தீ விபத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க எந்த கூட்டாட்சி விதிமுறைகளும் இதுவரை இல்லை என்று AWI வருத்தம் தெரிவித்துள்ளது.

    2013 ஆம் ஆண்டு AWI இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்கத் தொடங்கியதில் இருந்து, டெக்சாஸ் பண்ணையில் ஏற்பட்டிருக்கும் இந்த தீ விபத்து தான், கால்நடைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து என்று விலங்குகள் நல நிறுவனம் (AWI) கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    அமெரிக்கா

    திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்! வங்கிக் கணக்கு
    'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா உலகம்
    தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச் இந்தியா
    பணிநீக்கம் செய்த நிறுவனங்களை கதறவிட்ட முன்னாள் ஊழியர்கள்! புதிய வளர்ச்சி தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025