NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு
    அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்துள்ளார்

    வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 10, 2023
    09:49 am

    செய்தி முன்னோட்டம்

    வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுபற்றி அந்நாட்டின் ஊடகமான KCNA, வியாழனன்று விரிவான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    வட கொரியாவின் எதிரிகளைத் தடுப்பதற்கான எதிர் நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில் கிம் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார் என அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

    இருப்பினும், வடகொரியாவின் எதிரிகள் யாரென்று பெயர் குறிப்பிடப்படவில்லை.

    மேலும், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலுக்குப் பதிலாக ஜெனரல் ரி யோங் கில் நியமிக்கப்பட்டார் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    card 2

    ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த உத்தரவு:

    கிம், ஆயுத உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கான இலக்கையும் நிர்ணயித்துள்ளார் என KCNA தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம், கிம் ஆயுத தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் என்றும், அங்கு அவர், கூடுதலாக ஏவுகணை இயந்திரங்கள், பீரங்கி மற்றும் பிற ஆயுதங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிகிறது.

    ஏற்கனவே, பீரங்கி குண்டுகள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனில் நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு, வடகொரியா வழங்குவதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனினும், ரஷ்யாவும் வடகொரியாவும் இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளன. வடகொரியா அதிபர், நாட்டின் சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன், போர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ராணுவம் தனது படைகளை, போருக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வட கொரியா

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    வட கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் தென் கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது ஜப்பான்
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா அமெரிக்கா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025