NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா
    உலகம்

    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா

    எழுதியவர் Sindhuja SM
    February 20, 2023 | 10:10 am 1 நிமிட வாசிப்பு
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய  வடகொரியா
    இது 48 மணி நேரத்திற்குள் வடகொரியா ஏவும் இரண்டாவது ஏவுகணையாகும்.

    வட கொரியா இன்று(பிப் 20) இன்னொரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது. இது 48 மணி நேரத்திற்குள் வடகொரியா ஏவும் இரண்டாவது ஏவுகணையாகும். அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்ட ஒரு நாளில் இது நடந்திருக்கிறது. "வட கொரியா ஒரு சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது" என்று ஜப்பான் பிரதமர் அலுவலகமும் இன்று காலை ட்வீட் செய்துள்ளது. ஏவுகணை "ஏற்கனவே விழுந்துவிட்டதாகத் தெரிகிறது" என்று ஜப்பானிய கடலோர காவல்படை கூறியுள்ளது. அதை தவிர வேறு எந்த விவரங்களையும் அது வெளியிடவில்லை.

    48 மணி நேரத்திற்குள் 2 ஏவுகணையை ஏவிய வட கொரியா

    சனிக்கிழமை அன்று வட கொரியாவால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு(ICBM) பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து நேற்று கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தியது. ICBM, 66 நிமிடங்கள் பறந்து ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில்(EEZ) தரையிறங்கியதாக ஜப்பான் கூறியிருந்தது. சனிக்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை Hwasong-15 என்றும், அபாயகரமான அணுஆயுத்தை தங்களாலும் வீச முடியும் என்றும் வட கொரியா அதன்பின் கூறி இருந்தது. இன்று வட கொரியா ஏவிய ஏவுகணையின் நோக்கம் என்னவென்று இப்போது வரை தெரியவில்லை. இது குறித்து வட கொரியா விரைவில் தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வட கொரியா
    தென் கொரியா
    உலகம்
    அமெரிக்கா

    வட கொரியா

    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது ஜப்பான்
    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் தென் கொரியா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா உலகம்
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு தென் கொரியா

    தென் கொரியா

    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி உலக செய்திகள்
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா

    உலகம்

    'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை கோவை
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை ஆஸ்திரேலியா
    இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு உலகம்
    வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சுற்றுலா

    அமெரிக்கா

    அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா சீனா
    நான்காவது பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க இராணுவம் உலகம்
    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா இந்தியா
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023