NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்
    நைஜரில் திடீர் ராணுவ புரட்சி

    நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 27, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் அதிபர் முகமது பாஸூம், புதன்கிழமையன்று (ஜூலை 26) நாட்டில் திடீரென உருவாகியுள்ள ராணுவ புரட்சியால் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.

    நைஜரின் ஜனாதிபதி காவலரின் உறுப்பினர்கள் அரண்மனையைச் சுற்றி வளைத்து, தலைநகரான நியாமியில் உள்ள அவரது குடியிருப்பு மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகளை சீல் வைத்த ஒருநாளுக்கு பிறகு, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

    அதிபரை விடுவிக்க பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் இருந்தபோதிலும், பேச்சுவார்த்தை பாதியிலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    அதிபரை சிறைபிடித்துள்ள வீரர்கள், முகமது பாஸூமை விடுவிக்க மறுத்துவிட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.

    reason behind niger soldier coup

    ராணுவ புரட்சிக்கான பின்னணி

    ராணுவ தலைமையேற்று நடத்தி வரும் கர்னல்-மேஜர் அமடூ அப்த்ரமனே, தனது தொலைக்காட்சி உரையில், அதிபர் பாஸூமின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வீரர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

    தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு நிலைமையின் சரிவு மற்றும் மோசமான பொருளாதார மற்றும் சமூக நிர்வாகம் ஆகியவை முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.

    நாட்டைப் பாதுகாப்பதற்கான தேசிய கவுன்சில் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவர், சர்வதேச மற்றும் தேசிய சமூகத்துடன் இணைந்து செயல்பட உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த கலகத்திற்கு இராணுவத்தின் இதர பிரிவுகள் ஆதரவு அளித்ததா என்பது பற்றிய உடனடி குறிப்பு எதுவும் இல்லை.

    இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பாஸூமை உடனடியாக விடுவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிரிக்கா

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025