NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்
    உலகம்

    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்

    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023, 07:05 pm 1 நிமிட வாசிப்பு
    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்
    கர்னாடிக் 2.0 இசைக்குழு பாரம்பரிய கர்நாடக ராகங்கள் மற்றும் ரெட்ரோ-பாலிவுட் பாடல்களின் கலவையை இந்த நிகழ்வின் போது இசைத்தது

    இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால அசைக்க முடியா உறவைக் கொண்டாடும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று(ஜன:20) "சங்கீத் சுகூன்" என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய இசைக்குழுவான கர்னாட்டிக் 2.0 மற்றும் நேபாள இசைக்குழு 'குடும்பா' ஆகியவை கலந்துகொண்டன. இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டு விழாவும் 74வது குடியரசு தினமும் இந்நிகழ்ச்சியில் கொண்டாடப்பட்டது. இதில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல்(எ)பிரசந்தா, முன்னாள் பிரதமர்கள் கே.பி.சர்மா ஒலி, மாதவ் குமார் நேபால், டாக்டர் பாபுராம் பட்டராய், மூத்த தலைவர்கள் மஹந்தா தாக்கூர், ராஜேந்திர மஹதோ ஆகியோர் கலந்துகொண்டதாக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இசையுடன் ஒன்றிணைந்த இரு நாடுகள்

    அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வெளியுறவு அமைச்சர் பிமலா ராய் பௌத்யால், தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் தாமோதர் பண்டாரி மற்றும் நேபாள ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கர்னாடிக் 2.0 இசைக்குழு பாரம்பரிய கர்நாடக ராகங்கள் மற்றும் ரெட்ரோ-பாலிவுட் பாடல்களின் கலவையை இந்த நிகழ்வின் போது இசைத்தது. அதே நேரத்தில் 'குடும்பா' இசைக்குழு நேபாளத்தின் பாரம்பரிய இசையை வாசித்து அசத்தியது. இன்று(ஜன:21) நேபாளத்தில் உள்ள லலித்பூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள படன் தர்பார் சதுக்கத்தில் கர்னாடிக் 2.0 மீண்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    உலகம்

    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023