Page Loader
வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
தேர்ந்தெடுக்கப்படும் 108 அதிகாரிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்

வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

எழுதியவர் Sindhuja SM
Jan 20, 2023
02:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க இந்திய ராணுவம் முன் வந்திருக்கிறது. இது ஜனவரி-9 முதல் ஜனவரி-22 வரை நடத்தப்படுகிறது. ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவை பிரிவுகளில் இருக்கும் காலி இடங்களுக்கு இந்த சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. 1992 பேட்ச் முதல் 2006 பேட்ச் வரையுள்ள 244 பெண் அதிகாரிகள் 108 காலியிடங்களுக்கு பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படுகிறார்கள்.

பெண் அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறை

இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் இந்த சிறப்பு எண்-3 காலியிடங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 60 பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் தேர்வு வாரியத்திற்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நியாயமான நடத்தையை உறுதிப்படுத்தவும், அவர்களின் அச்சங்கள் ஏதேனும் இருந்தால் தெளிவுபடுத்தவும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் இந்த 108 அதிகாரிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். அத்தகைய பதவிகளின் முதல் தொகுப்பு ஜனவரி 2023 இறுதிக்குள் வழங்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் அதிகாரிகள் இது போன்ற ராணுவ உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.