NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு
    "பணி என்பது அனைவருக்கும் சமம். இதில் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது" -நீதிபதிகள்

    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 13, 2022
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ராணுவத்தில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

    ராணுவத்தில் ஆண் பெண்களுக்கு இடையில் அதிகம் பாரபட்சம் பார்க்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் போட்டவர்கள்.

    ராணுவத்தில் பதவி உயர்வுக்கு நடத்தப்படும் தேர்வு வாரியத்திற்கு பெண் அதிகாரிகள் பரிசீலிக்க படுவதில்லை என்பது தான் இந்த 34 பெண் அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

    10 Dec 2022

    எதற்காக இந்த வழக்கு?

    இவர்கள் தரப்பு வாதத்தின் முக்கிய புள்ளிகள்:

    சுமார் 249 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற போதிலும் கடந்தமுறை நடத்தப்பட்ட SB3 ,SB2 தேர்வு வாரியங்களில் பெண் அதிகாரிகள் யாருக்குமே பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    இளைய ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும் போது பெண் ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    இதை விசாரித்த நீதிபதிகள், "பணி என்பது அனைவருக்கும் சமம். இதில் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது. இந்த பிரச்சனைத் தீரும் வரை SB3யில் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டனர்.

    மேலும், இந்த விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025