NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்
    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அஜூர் விமானம் அவசரமாக தரையிறக்கம்

    ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷிய தலைநகர் மாஸ்கோ, பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது.

    இதில் 7 விமான சிப்பந்திகள், 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 238 பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்நிலையில் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

    மாஸ்கோவில் இருந்து கிளம்பிய இந்த விமானம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் கோவா டபோலிம் விமான நிலையத்திற்கு வந்திருக்க வேண்டும்.

    ஆனால் அந்த அஜூர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான நிலைய இயக்குனருக்கு நள்ளிரவு 12.30 மணியளவில் இமெயில் வந்துள்ளது.

    வெடிகுண்டு சிக்கவில்லை

    தரையிறக்கப்பட்ட விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

    இதனையடுத்து கோவா விமானநிலைய இயக்குனர் அந்த அஜூர் விமானத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அளித்துள்ளார்.

    தகவலறிந்தவுடன் அந்த விமானத்தை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்ப முடிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக உஸ்பெகிஸ்தான் விமானநிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் தரையிறக்கப்படுவதால் அந்த விமானநிலையத்தில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

    அதன்பின் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டார்கள்.

    சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    ரஷியாவில் இருந்து கோவா வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது இது 2வது முறையாகும்.

    கடந்த 9ம்தேதி ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு இதே மாதிரி மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    உலக செய்திகள்

    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் சீனா
    தாய்லாந்து இளவரசி மஹிடோல் உடல்நிலை குறித்து அரண்மனை அறிக்கை வெளியீடு உலகம்
    முன்னாள் காதலனின் இறுதி சடங்கிற்கு மேக்-அப் போட்டு கிளம்பி சென்ற 92 வயது மூதாட்டி வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025