NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
    துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
    உலகம்

    துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    February 11, 2023 | 07:47 pm 1 நிமிட வாசிப்பு
    துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
    நிலநடுக்கத்தில் இதுவரை கிட்டத்தட்ட 25,000 பேர் பலியாகியுள்ளனர்.

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமல் போன இந்தியர் ஒருவர் இன்று(பிப் 11) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் தொலைதூர பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் MEAஇன் செயலாளர்(மேற்கு) சஞ்சய் வர்மா புதன்கிழமை(பிப் 8) தெரிவித்திருந்தார். உத்தரகாண்டின் கோட்வாரை சொந்த ஊராக கொண்ட கவுட் என்பவர், பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும், அவர் துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிந்தார்.

    டாட்டூவால் இந்தியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா

    "கடந்த இரண்டு நாட்களாக அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நாங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், பெங்களூருவில் இருக்கும் அவர் பணிபுரியும் நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்" என்று வர்மா கூறி இருந்தார். இந்நிலையில், காணாமல் போயிருந்த அவரது உடல் கிடைத்திருப்பதாகவும், அவரது கையில் இருந்த டாட்டூவை வைத்து அவரது குடும்பத்தினர் அவர் உடலை அடையாளம் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதை சீக்கிரமே இந்திய வெளியுறவு அமைச்சகத்தால்(MEA) உறுதி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 25,000ஐ தொட்டுள்ளது. இந்திய மீட்பு படையினரும் இந்திய நாய் படையும் இன்னும் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    உலகம்

    துருக்கி

    104 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பெண், மீட்கப்பட்ட 1 நாளில் உயிரிழந்தார் உலகம்
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண் துருக்கி
    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி

    உலகம்

    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா இந்தியா
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா அமெரிக்கா
    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்! ஆட்குறைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023