துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து மனதை உடைக்கும் பல வீடியோ காட்சிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நம்மை அழ தூவைக்கும் பல வீடியோக்களுக்கு மத்தியில் நமக்கு நம்பிக்கை அளிக்கும் சில வீடியோக்களும் இருக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. ஒரு நாயை வெளியே எடுப்பதற்காக பல மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றுவது அந்த வீடியோவில் தெரிகிறது. அதில் ஒருவர் பல மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த நாய்க்கு சிறிது தண்ணீர் கொடுக்க முயற்சிக்கிறார். இதை பார்க்கும் போது நம் கண்கள் கலங்கி மனதில் பாரம் ஏற்பட்டாலும், நல்லவேளையாக ஒரு உயிர் தப்பியதே என்ற சந்தோஷமும் ஏற்படுகிறது.