NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தொலைந்து போன 8 வயது சீன சிறுமி, ATM உதவியுடன் குடும்பத்தைக் கண்டுபிடித்த அதிசயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொலைந்து போன 8 வயது சீன சிறுமி, ATM உதவியுடன் குடும்பத்தைக் கண்டுபிடித்த அதிசயம்
    சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்

    தொலைந்து போன 8 வயது சீன சிறுமி, ATM உதவியுடன் குடும்பத்தைக் கண்டுபிடித்த அதிசயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 19, 2024
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்.

    அவளுடைய உயிர் பிழைக்கும் உள்ளுணர்விற்காகப் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார்.

    ஜூலை 30 ஆம் தேதி சிறுமி தனது நடன வகுப்பில் இருந்து வீடு திரும்பியபோது, ​​​​எதிர்பாராதவிதமாக அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிரிந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    கையில் மொபைல் ஃபோன் அல்லது பரிச்சயமான முகங்கள் ஏதும் இல்லாமல் போகவே கவலையடைந்த அந்த சிறுமி, துரிதமாக செயல்பட்டு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டுபிடித்தாள்.

    SOS

    ஏடிஎம்மின் அவசர பட்டன் தன்னை காப்பாற்றும் என யூகித்த சிறுமி 

    தனது அவசர நிலையில், அந்த சிறுமி அருகில் உள்ள ஏடிஎம் பூத்தை பார்த்துள்ளாள். அதை உதவிக்கு பயன்படுத்த முடிவு செய்தாள்.

    வங்கியின் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கு இயந்திரத்தின் அருகே இருந்த சிவப்பு பொத்தானை சிறுமி அழுத்தினாள்.

    Quzhou Rural Commercial Bank இல் பணிபுரியும் Zhou Dongying, இண்டர்காம் அமைப்பு மூலம் அவரது அழைப்புக்கு பதிலளித்தார்.

    தாத்தாவின் தொலைபேசி எண் அல்லது அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று Zhou அந்தப் பெண்ணிடம் கேட்டபோது, ​​அவள் இல்லை என்று சொன்னாள்.

    வெற்றிகரமான மறு இணைவு

    காவல்துறையின் தலையீடு மகிழ்ச்சியான குடும்ப மறு இணைப்பிற்கு உதவியது

    சிறுமியின் பதிலை கேட்டதும், வங்கி அதிகாரி, உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்தார்.

    பின்னர் அவர் சிறுமியை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தி, இண்டர்காம் மூலம் அவளுடன் தொடர்பிலிருந்தார்.

    Kaihua County Public Security Bureau வின் அதிகாரிகள் விரைவில் வந்து, அவளை பரிதவிப்புடன் தேடிக் கொண்டிருந்த அவளது தாத்தாவுடன் மீண்டும் சேர்ப்பித்தனர்.

    "இதுபோன்ற ஏடிஎம்மை பயன்படுத்த முடியும் என்பதை நான் அறிந்தது இதுவே முதல் முறை. புத்திசாலி சிறுமி மற்றும் அன்பான ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்" என்று பார்வையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சீனா

    இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல் மாலத்தீவு
    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக திமுக
    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  இந்தியா
    மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025