LOADING...
ஈரானை நோக்கி பாயும் அமெரிக்கக் கப்பற்படை: அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு வருமாறு எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஈரானை நோக்கி பாயும் அமெரிக்கக் கப்பற்படை: அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு வருமாறு எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2026
07:32 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் நாட்டுக்கு மிக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானின் அணு ஆயுத கனவை கைவிடவும், பேச்சுவார்த்தைக்கு முன்வரவும் வலியுறுத்தியுள்ள அவர், அமெரிக்காவின் பிரம்மாண்டமான கப்பற்படை(Massive Armada) ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தலைமையிலான இந்தப் படைப்பிரிவு, வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டதை விடப் பெரியது என்றும், இது அதிக ஆற்றலுடனும் நோக்கத்துடனும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும். அணு ஆயுதம் இல்லாத, அனைவருக்கும் சமமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய இதுவே கடைசி வாய்ப்பு. நேரம் கடந்து கொண்டிருக்கிறது," என அவர் எச்சரித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நடவடிக்கை

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்'(Operation Midnight Hammer)

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்பஹான் ஆகியவற்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "அன்று பேச்சுவார்த்தைக்கு வராததால் ஈரான் பெரும் அழிவைச் சந்தித்தது. இந்த முறை தாக்குதல் நடத்தப்பட்டால் அது முன்பை விடப் பலமடங்கு மோசமாக இருக்கும்," என்று அவர் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆபிரகாம் லிங்கன் கப்பல் படைப்பிரிவு ஏற்கனவே இந்தியப் பெருங்கடல் வழியாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. அமெரிக்க விமானப்படை (AFCENT) மத்திய கிழக்கு பகுதியில் பல நாட்கள் நீடிக்கக்கூடிய ஒரு பெரிய அளவிலான தயார்நிலை பயிற்சியை தொடங்கியுள்ளது.

Advertisement