LOADING...
வீடுபுகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் வாரிசு; லிபியாவில் அதிரடி தாக்குதல்
முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி கொல்லப்பட்டார்

வீடுபுகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் வாரிசு; லிபியாவில் அதிரடி தாக்குதல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
09:41 am

செய்தி முன்னோட்டம்

லிபியாவின் மறைந்த முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), ஆயுதமேந்திய கும்பலால் சுட்டு கொல்லப்பட்டதாக அவரது அரசியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் நகரில் உள்ள அவரது இல்லத்திற்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட 'கமாண்டோ' குழுவினர், இந்த திட்டமிட்ட படுகொலையை நிகழ்த்தியதாக அவரது வழக்கறிஞர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். எனினும், இந்த படுகொலைக்கு யார் உத்தரவிட்டது அல்லது இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

விவரங்கள்

யார் இந்த சைஃப் அல்-இஸ்லாம்?

சைஃப் அல்-இஸ்லாம் ஜின்டானில் கொல்லப்பட்டதாக ஒரு தரப்பு கூறினாலும், அவர் அல்ஜீரியா எல்லைக்கு அருகே உயிரிழந்ததாக அவரது சகோதரி லிபியத் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார். இந்த முரணான தகவல்கள் லிபியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. தனது தந்தை முஅம்மர் கடாபியின் 40 ஆண்டுகால ஆட்சியில் அவருக்கு அடுத்தபடியாக மிகவும் செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார் சைஃப் அல்-இஸ்லாம். லிபியாவில் மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியலமைப்பிற்காக பரிந்துரைத்த அவர், உலக நாடுகளுடன் லிபியாவின் உறவை மேம்படுத்தப் பாடுபட்டார். 2011-ல் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது பிடிபட்ட இவர், சுமார் பத்து ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு மீண்டும் அரசியலில் நுழைந்தார். சமீபத்தில் லிபிய அதிபர் தேர்தலில் போட்டியிடவும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

Advertisement