NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால்  உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
    மக்கள் நெருக்கடியை குறைக்க ஒரு மில்லியன் யென் உதவிதொகை: ஜப்பான் அரசு

    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    டோக்கியோவில் இருந்து கிராமப்புறங்களில் குடியேறுபவர்களுக்கு ஜப்பான் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.

    அதிக வேலை பளுவாலும் விலைவாசி உயர்வாலும் பெரும்பாலான ஜப்பானிய மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.

    இதனால், ஜப்பானில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்காமல் தேக்கத்தில் இருப்பதாக கடந்த சில வருடங்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    இதை, சரிசெய்ய ஜப்பான் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    சில வாரங்களுக்கு முன், குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு ஜப்பான் உதவிதொகை வழங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

    இப்படி மக்கள் தொகையின் வீழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாட்டில் உள்ள 28%(அதாவது 3.5 கோடி பேர்) மக்கள் ஜப்பான் தலைநகரான டோக்கியாவில் தான் வசிக்கிறார்கள்.

    இதனால் டோக்கியாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

    டோக்கியோ

    மக்கள் நெருக்கடியால் திணறும் டோக்கியோ!

    மேலும், இளைய தலைமுறையினர் எல்லாம் வேலை தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்துவிடுவதால், கிராமபுறங்களில், முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாவும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கிறது.

    இதனால், ஜப்பான் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சனையைத் தீர்த்து டோகியோவில் இருக்கும் மக்கள் நெருக்கடியை குறைக்க, ஜப்பான் அரசு கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்பவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது.

    இதன் படி, கிராமங்களுக்கு இடம் பெயரும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு மில்லியன் யென்(6.36 லட்ச ரூபாய்) உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

    மேலும், கிராமங்களில் தொழில் தொடங்குவதற்கு தனியாக மானியம் வழங்கப்படும் என்றும் ஜப்பான் அரசு கூறி இருக்கிறது.

    இதுவரை இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள்:

    2021ஆம் ஆண்டு- 71 பேர்

    2022ஆம் ஆண்டு- 1,184 பேர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்

    உலகம்

    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்! உலக செய்திகள்
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வட கொரியாவில் சிரிப்பதற்கு தடையா? டிரெண்டிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025