NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
    உலகம்

    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?

    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2023, 06:32 pm 1 நிமிட வாசிப்பு
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால்  உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
    மக்கள் நெருக்கடியை குறைக்க ஒரு மில்லியன் யென் உதவிதொகை: ஜப்பான் அரசு

    டோக்கியோவில் இருந்து கிராமப்புறங்களில் குடியேறுபவர்களுக்கு ஜப்பான் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதிக வேலை பளுவாலும் விலைவாசி உயர்வாலும் பெரும்பாலான ஜப்பானிய மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இதனால், ஜப்பானில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்காமல் தேக்கத்தில் இருப்பதாக கடந்த சில வருடங்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதை, சரிசெய்ய ஜப்பான் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன், குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு ஜப்பான் உதவிதொகை வழங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இப்படி மக்கள் தொகையின் வீழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாட்டில் உள்ள 28%(அதாவது 3.5 கோடி பேர்) மக்கள் ஜப்பான் தலைநகரான டோக்கியாவில் தான் வசிக்கிறார்கள். இதனால் டோக்கியாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

    மக்கள் நெருக்கடியால் திணறும் டோக்கியோ!

    மேலும், இளைய தலைமுறையினர் எல்லாம் வேலை தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்துவிடுவதால், கிராமபுறங்களில், முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாவும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கிறது. இதனால், ஜப்பான் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையைத் தீர்த்து டோகியோவில் இருக்கும் மக்கள் நெருக்கடியை குறைக்க, ஜப்பான் அரசு கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்பவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. இதன் படி, கிராமங்களுக்கு இடம் பெயரும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு மில்லியன் யென்(6.36 லட்ச ரூபாய்) உதவி தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், கிராமங்களில் தொழில் தொடங்குவதற்கு தனியாக மானியம் வழங்கப்படும் என்றும் ஜப்பான் அரசு கூறி இருக்கிறது. இதுவரை இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள்: 2021ஆம் ஆண்டு- 71 பேர் 2022ஆம் ஆண்டு- 1,184 பேர்

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    ஜப்பான்

    சமீபத்திய

    ராகுல் காந்தி வீட்டிற்கு சென்ற போலீஸ்: நாடு தழுவிய போராட்டத்தை நடத்துமா காங்கிரஸ் இந்தியா
    செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம் செயற்கை நுண்ணறிவு
    அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? கோலிவுட்
    இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடித்த தினேஷ் சண்டிமால் டெஸ்ட் கிரிக்கெட்

    உலகம்

    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலக செய்திகள்
    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை இந்தியா
    LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் ஆரோக்கியம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    ஜப்பான்

    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு தென் கொரியா
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது இந்தியா
    ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள் இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023